முரசுகளும்; அதிர் குரல் சங்கமும்- கேட்டாரை அதிரச் செய்யும் குரலை உடைய சங்குகளும்; அசனி ஈன்ற காளமும்- இடி ஒலி உண்டாக்கும் எக்காளமும் ஆகிய இசைக்கருவிகளின் ஒலி; ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப- பதினான்கு உலகங்களிலும் சென்று ஒலிப்பன ஆயின. |
(4) |
9535. | அனைய ஆகிய அரக்கர்க்கும் அரக்கனை, அவுணர் |
| வினைய வானவர் வெவ் வினைப் பயத்தினை, வீரர் |
| நினையும் நெஞ்சையும் சுடுவது ஓர் நெருப்பினை, |
| நிமிர்ந்து |
| கனையும் எண்ணையும் கடப்பது ஓர் கடலினைக் |
| கண்டார். |
|
அனைய ஆகிய அரக்கர்க்கும்- அத்தன்மை கொண்டு வரும் அரக்கர்களுக்கும்; அரக்கனை- அரக்கனாக இருப்பவனை; அவுணர் வினைய- அவுணர்களின் தீவினையுடைய; வானவர் வெவ்வினைப் பயத்தினை- தேவர்களின் கொடிய தீவினைப் பயனாகத் துன்பம் செய்கின்றவனை; வீரர் நினையும் நெஞ்சையும்- தன்னை நினைக்கும் போர் வீரர்களின் உள்ளத்தையும்; சுடுவது ஓர் நெருப்பினை- சுடுகின்ற ஒப்பற்ற தீப்போன்றவனை; நிமிர்ந்து கனையும் எண்ணையும்- எல்லையைக் கடந்து நிற்கும் அளவினையும்; கடப்பது ஓர் கடலினைக் கண்டார்- கடந்து நிற்கின்ற ஒப்பற்ற கடல் போன்ற நிறமும் ஆற்றலும் உடைய இராவணனைக் கண்டனர். |
(5) |
9536. | கண்டு, கைகளோடு அணி வகுத்து, உரும் உறழ |
| கற்கள் |
| கொண்டு, கூற்றமும் நடுக்குறத் தோள் புடை |
| கொட்டி, |
| அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து உலைவுற, |
| ஆர்த்தார்- |
| 'மண்டு போரிடை மடிவதே நலம்' என மதித்தார். |
|
கண்டு - இராவணனைப் பார்த்து; மண்டு போரிடை - நெருங்கிச் செய்யும் போரிலே; மடிவதே நலம் என மதித்தார் - சாவதே நல்லது என மதித்தவராய்; கைகளோடு அணி வகுத்து- போர்க்களத்தில் பக்கங்களோடு முன்பின் வரிசையாக நின்று; |