பக்கம் எண் :

202யுத்த காண்டம் 

உரும் உறழ் கற்கள் கொண்டு  -  இடிபோல் பகைவர்க்குத்
துன்பம் செய்யும்  கற்களைக்  கொண்டு; கூற்றமும் நடுக்குற-
எமனும் நடுங்குமாறு;   தோள்புடை கொட்டி- தோள்களைத்
தட்டிக் கொண்டு; அண்ட கோடிகள் - பல உலகின் பல்வேறு
மூலை முடுக்குகளும்; அடுக்கு அழிந்து- அடுக்குமுறை குலைந்து;
உலைவுற- வருந்துமாறு; ஆர்த்தார்- ஆரவாரம் செய்தார்.
 

(6)
 

இருபடையும் கைகலத்தல்
 

9537.

அரக்கன் சேனையும், ஆர் உயிர் வழங்குவான்

அமைந்த

குரக்கு வேலையும், ஒன்றொடு ஒன்று, எதிர் எதிர்

கோத்து,

நெருக்கி நேர்ந்தன, நெருப்பு, இடை பொடித்தன;

நெருப்பின்

உருக்கு செம்பு என, அம்பரத்து, ஓடினது, உதிரம்.

 

அரக்கன் சேனையும்- இராவணன் படையும்; ஆருயிர்
வழங்குவான் அமைந்த
  -  தம் அரிய   உயிரைப் போரில்
அழிக்குமாறு நின்ற; குரக்கு வேலையும்   -  குரங்கின் கடல்
போன்ற படையும்; ஒன்றோடு ஒன்று எதிர் எதிர் கோத்து-
ஒன்றுடன் ஒன்று   எதிர்   எதிராகக்   கைகலந்து; நெருக்கி
நேர்ந்தன
- நெருக்கியவாறு போர் புரிந்தன; நெருப்பு இடை
பொடித்தன
- தாக்குவதால் இரு படைக்கும் இடையில் நெருப்புத்
தோன்றின;   நெருப்பின்   உருக்கு   செம்பு என- தீயிலே
காய்ச்சி உருக்கிய செம்பு போல; உதிரம் அம்பரத்து ஓடினது
- இரத்தம் கடலை நோக்கி ஓடியது.
 

(7)
 

9538.

அற்ற வன் தலை அறு குறை எழுந்து எழுந்து,

அண்டத்து

ஒற்ற, வானகம் உதய மண்டிலம் என ஒளிர,

சுற்றும் மேகத்தைத் தொத்திய குருதி நீர் துளிப்ப,

முற்றும் வையகம் போர்க் களம் ஆம் என முயன்ற.

 

அற்ற வன்தலை- அறுபட்ட வலிய தலை; அறுகுறை எழுந்து
எழுந்து
  -  தலை  அற்ற  உடல்  குறையிலிருந்து  எழுந்தெழுந்து;
அண்டத்து  ஒற்ற - மேலே போய் ஒற்றுதலால்; வானகம் உதய
மண்டிலம் என ஒளிர
- விண்ணில் எழுகின்ற கதிரவன் போல ஒளி