பக்கம் எண் :

204யுத்த காண்டம் 

முகத்து-   கணவர்   தம்   கண்கள்   விழித்துள்ளனவாகிய
முகங்களில்; அவர்   முறுவல்   கண்டு   இறந்த அன
மடந்தையர்
-     அவர்களுடைய   சிரிப்பைப்    பார்த்து
மகிழ்ந்து   தம்    உடலை   விட்டுப் பிரிந்தவர்   போன்ற
கற்புடை மகளிர்;   உயிரொடும்  கலந்தார்- தம்   இறந்த
கணவருடைய உயிரொடு ஒன்றாய்க் கலந்தனர்.
  

(10)
 

9541.

ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும்

ஊழி பேர்வதே ஒப்பது ஓர் உலைவுற, உடற்றும்

நூழில் வெஞ் சமம் நோக்கி, அவ் இராவணன்

நுவன்றான்-

'தாழ் இல் என் படை தருக்கு அறும்' என்பது ஓர்

தன்மை.

 

ஏழும் ஏழும் என்று   உரைக்கின்ற   உலகங்கள் யாவும்
- கீழ் ஏழு உலகம் மேல் ஏழு உலகம் எனச் சொல்லும் உலகங்கள்
பதினான்கும்; ஊழி   பேர்வது   ஒப்பது- ஊழிக்கால முடிவில்
நிலை பெயர்வது போன்ற; ஓர் உலைவுற உடற்றும்- ஒரு அழிவு
உண்டாகப் போரிடுகின்ற; நூழில்    வெஞ்சமம்    நோக்கி-
பகைவரைக்    கொல்லும்   கொடிய  போர்க்களத்தைப்   பார்த்து;
அவ்இராவணன்- அந்த இராவணன்; தாழி இல் என்படை தருக்கு
அறும் என்பது ஓர் தன்மை நுவன்றான்
- தாழ்வு   இல்லாத என்
சேனை இனிச் செருக்கு அழியும் என்ற ஒரு தன்மையைக் கூறினான்.
 

(11)
 

9542.

மரமும் கல்லுமே, வில்லொடு வாள், மழு, சூலம்

அரமும், கல்லும், வேல் முதலிய அயில் படை அடக்கி,

சிரமும் கல் எனச் சிந்தலின், சிதைந்தது, என்

சேனை

உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது

ஒருபால்.

 

உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒருபால்-
வலிமையும் கல்வியறிவும் உள்ள அனுமான் போர் செய்யும் ஒரு
பக்கத்தில்; மரமும் கல்லுமே வில்லொடு வாள் மழு சூலம்
அரமும் கல்லும் வேல் முதலிய அயில் படை   அடக்கி
-
வானரர்கள் வீசும் மரங்களும் கற்களுமே    கொண்டு வில்லும்
வாளும் மழுவும்  சூலமும் அரத்தையும் அழிக்கத்தக்க உறுதி
மிக்க வேல் முதலிய