கூரிய படைகளையும் அடக்கிவிட்டு; சிரமும் கல் எனச் சிந்தலின்- அரக்கர்களின் தலைகளையும் கற்கள் போல உருளுமாறு சிந்துவதால்; என் சேனை சிதைந்தது - என்படை அழிந்தது. |
(12) |
9543. | அழலும் கண் களிறு அணியொடும் துணி படும்; |
| ஆவி |
| சுழலும் பல் படைத் தொகுதியும்; அன்னதே சுடர்த் |
| தேர்; |
| சுழலும் சோரி நீர் ஆற்றொடும் கடலிடைக் |
| கலக்கும் - |
| குழலும் நூலும்போல் அனுமனும் தானும் அக் குமரன். |
|
குழலும் நூலும் போல் - நெய்கின்ற குழலும் அதைத் தொடர்ந்து செல்லும் நூலும் போல; அனுமனும் தானும் அக்குமரன் - ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து அநுமனும் இலக்குமணனும் போர் செய்தனர்; அழலும் கண் களிறு- சினம் மிக்க கண்ணுடைய யானைகள்; அணியொடும் துணிபடும் - அணிந்த அணிகலன்களோடு துண்டுபடும்; பல்படைத் தொகுதியும் ஆவி சுழலும்- பலவகைப் படை வீரரின் கூட்டமும் உயிர் சுழன்று நிற்கும்; சுடர்த்தேர் அன்னதே - ஒளிமிக்க தேர்களும் சுழலும்; கழலும் சோரிநீர் ஆற்றொடும் கடலிடைக் கலக்கும் - இறந்து பட்ட உடம்பிலிருந்து இரத்தம் ஆற்று நீரோடு கலந்து கடலிடையே சேரும். |
(13) |
9544. | 'வில்லும் கூற்றுவற்கு உண்டு' என, திரிகின்ற வீரன் |
| கொல்லும் கூற்று எனக் குறைக்கும், இந் நிறை |
| பெருங் குழுவை; |
| ஒல்லும் கோள் அரி, உரும், அன்ன குரங்கினது |
| உகிரும் |
| பல்லும் கூர்க்கின்ற; கூர்க்கில அரக்கர்தம் படைகள். |
|
வில்லும் கூற்றுவற்கு உண்டு என திரிகின்ற வீரன்- இயமனுக்குத் தண்டேயன்றி வில்லும் படையாக உண்டு எனக் கூறும்படி போர்க்களத்தில் திரிகின்ற இலக்குவன்; கொல்லும் கூற்று எனக் குறைக்கும் - கொல்லுவதைத் தொழிலாக கொண்ட யமன் போல் அரக்கர் எண்ணிக்கையைக் கொன்று குறைக் |