பக்கம் எண் :

206யுத்த காண்டம் 

கின்றான்; இந்நிறை பெருங்குழுவை- இந்நிலையில் வானரர்
பெருங் கூட்டத்தை; ஒல்லும் கோள் அரி- வெல்லுதற்குரிய
வலிமையுடைய சிங்கமும்; உரும் அன்ன- இடியும் போன்ற;
குரங்கினது உகிரும் பல்லும் கூர்க்கின்ற  -  அனுமனாம்
குரங்கின்  நகமும் பல்லும்   அரக்கர் படையை   அழிக்கக்
கூர்மையுடையன;  அரக்கர்  தம்   படைகள் கூர்க்கில-
அரக்கரின்  படைகள்   வானரங்களை   அழிக்கக் கூர்மை
பெறவில்லை.
 

(14)
 

இராவணன் கொதித்தல்
 

9545.

'கண்டு நின்று, இறைப் பொழுது, இனிக் காலத்தைக்

கழிப்பின்,

உண்டு கைவிடும் கூற்றுவன், நிருதர் பேர் உயிரை;

மண்டு வெஞ் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே

கொண்டு மீள்குவென், கொற்றம்' என்று இராவணன்

கொதித்தான்.

 

இறைப்பொழுது- சிறிது போழ்து இங்ஙனம்; கண்டு நின்று
இனிக் காலத்தைக் கழிப்பின்
- இலக்குவன் அனுமன் புரியும்
போரைக் கண்டு காலத்தைக்    கழிப்பேன்   ஆனால்;   நிருதர்
பேர் உயிரை   உண்டு   கை விடும் கூற்றுவன்
- அரக்கரின்
பெருமை மிக்க    உயிர்களை   உண்டு போர்க்களத்தை விட்டுக்
கூற்றுவன் போய்  விடுவான்;   மண்டு   வெஞ்செரு- வீரர்கள்
நெருங்கிப் புரியும்  போரில்; நான் ஒரு களத்திடை   மடித்தே
கொற்றம் கொண்டு மீள்குவென்
- நான் ஒரு நொடிப்பொழுதில்
குரங்குகளைக் கொன்று    வெற்றி பெற்று   மீள்வேன்; என்று
இராவணன்    கொதித்தான்
- எனச் சொல்லி    இராவணன்
வெதும்பினான்.
 

(15)
 

9546.

ஊதை போல்வன, உரும் உறழ் திறலன, உருவிப்

பூதலங்களைப் பிளப்பன, அண்டத்தைப் பொதுப்ப,

மாதிரங்களை அளப்பன, மாற்ற அருங் கூற்றின்

தூது போல்வன, சுடு கணை முறை முறை துரந்தான்.

 

ஊதை போல்வன- காற்றைப் போல் வேகமாகச் செல்வனவும்;
உரும்  உறழ் திறலன -   இடிபோல்    அழிக்கும்     வலிமை
பெற்றனவும்;   உருவிப்   பூதலங்களைப்  பிளப்பன- உலகின்
ஊடுருவிப் பிளப்பனவும்; அண்டத்தைப் பொதுப்ப- வானத்தைத்
துளைப்பன