பக்கம் எண் :

 வேல் ஏற்ற படலம்207

வும்; மாதிரங்களை  அளப்பன- திசைகளை   அளப்பனவும்;
மாற்றருங் கூற்றின்  தூது போல்வன- மாற்றுதற்கு முடியாத
யமனின் தூதுவர்களைப் போல்வனவும்; சுடுகணை முறை முறை
துரந்தான்
- தீய்க்கின்ற அம்புகளை முறை முறையாகப் பகைவர்
மீது (இராவணன்) செலுத்தினான்.
 

(16)
 

9547.

ஆளி போன்று உளன் எதிர்ந்த போது, அமர்க்

களத்து அடைந்த

ஞாளி போன்று உள என்பது என்? நள் இருள்

அடைந்த

காளி போன்றனன் இராவணன்; வெள்ளிடைக் கரந்த

பூளை போன்றது, அப் பொரு சினத்து அரிகள்தம்

புணரி.

 

எதிர்ந்த போது ஆளி போன்று உளன்-   (இராவணன்)
எதிரிட்டபோது சிங்கம் போல் விளங்கினான்; அமர்க்களத்து-
போர்க்களத்தில்; அடைந்த ஞாளி போன்று - (வானரப்படை)
அடைந்தபோது நாயைப்போல இருந்தது என்பதால் பயன் என்ன?;
இராவணன்    நள்ளிருள்    அடைந்த காளி போன்றனன் -
இராவணன் செறிந்த இருட்டிலே   வந்த   காளி   தெய்வத்தைப்
போன்றான்; அப்பொரு சினத்து அரிகள் தம் புணரி - அந்தப்
போரிடும் கோபம் உடைய வானரர் படைக்கடல்; வெள்ளிடைக்
கரந்த பூனை போன்றது
- வெற்றிடத்தில் பொருந்திய    பூனைப்
பூக்கள் போன்றது.
 

(17)
 

இலக்குவன் - இராவணன் போர்
 

9548.

இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி

'அரிகள்! அஞ்சன்மின், அஞ்சன்மின்' என்று அருள்

வழங்கி,

திரியும் மாருதி தோள் எனும் தேர்மிசைச் சென்றான்;

எரியும் வெஞ் சினத்து இராவணன் எதிர் புகுந்து

ஏற்றான்.

 

இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி - தோற்று
ஓடுகின்ற வானர  சேனையை    இலக்குவன்    தடுத்து;   'அரிகள்!
அஞ்சன்மின், அஞ்சன்மின்' என்று அருள் வழங்கி
- 'வானரர்களே!