பக்கம் எண் :

208யுத்த காண்டம் 

பயப்படாதீர்கள்,   பயப்படாதீர்கள்'   என்று   அருள் மொழி
கூறி; திரியும் மாருதி தோள் எனும் தேர்மிசைச் சென்றான்
- திரிகின்ற அனுமானின்   தோள் என்னும் தேர் மேல்   ஏறிச்
சென்றான்; எரியும் வெஞ்சினத்து இராவணன் எதிர் புகுந்து
ஏற்றான்
- எரிகின்ற கொடிய கோபத்தை உடைய   இராவணன்
எதிரே சென்று எதிர்த்தான்.
 

(18)
 

9549.

ஏற்றுக் கோடலும், இராவணன் எரி முகப் பகழி
நூற்றுக் கோடியின்மேல் செலச் சிலைகொடு நூக்க,
காற்றுக்கு ஓடிய பஞ்சு எனத் திசைதொறும் கரக்க,
வேற்றுக் கோல்கொடு விலக்கினன், இலக்குவன்

விசையால்.

 

ஏற்றுக் கோடலும்- (அவ்வாறு   இலக்குவன்  எதிர் நின்று)
எதிர்த்த அளவில்; இராவணன் எரிமுகப் பகழி-   இராவணன்
நெருப்பை முனையிலே கொண்ட அம்புகளை; நூற்றுக் கோடியின்
மேல்
- நூறு கோடிக்கு மேலாக; செலச் சிலை கொடு நூக்க-
செல்லுமாறு வில்லால்    எய்ய; காற்றுக்கு   ஓடிய பஞ்சு என-
காற்றுக்கு   எதிர்    நிற்கமுடியாமல் ஓடிப் பறந்த   பஞ்சுபோல்;
திசைதொறும் கரக்க- திசைகள் தோறும் சென்று   மறையுமாறு;
இலக்குவன் வேற்றுக்கோல் கொடு விசையால் விலக்கினன்-
இலக்குவன் அவற்றிற்கு எதிரான அம்புகள் கொண்டு விசையால்
எதிர் விலக்கினான்.
 

(19)
 

9550.

விலக்கினான் தடந் தோளினும் மார்பினும், விசிகம்

உலக்க உய்த்தனன், இராவணன்; ஐந்தொடு ஐந்து

உருவக்

கலக்கம் உற்றிலன் இளவலும், உள்ளத்தில்

கனன்றான்

அலக்கண் எய்துவித்தான், அடல் அரக்கனை,

அம்பால்.

 

விலக்கினான் தடந்தோளினும் மார்பினும்  -  அவ்வாறு
விலக்கியவனாம் இலக்குவனின் பெரிய   தோளிலும்   மார்பிலும்;
இராவணன் ஐந்தொடு   ஐந்து விசிகம் உலக்க உய்த்தனன்-
இராவணன் பத்து அம்புகளை இலக்குவனின் வலிமை குறையுமாறு
விடுத்தான்; உருவக் கலக்கம் உற்றிலன் இளவலும்-