உடம்பின் அவ்வம்புகள் ஊடுருவக் கலக்கம் கொள்ளாத இலக்குவனும்; உள்ளத்தில் கனன்றான் - மனத்தில் கோபம் கொண்டு; அடல் அரக்கனை - வலிமை மிக்க இராவணனை; அம்பால் அலக்கண் எய்துவித்தான் - தன் அம்புகளால் துன்பமுறச் செய்தான். |
(20) |
9551. | காக்கல் ஆகலாக் கடுப்பினில் தொடுப்பன கணைகள் |
| நூக்கினான்; கணை நுறுக்கினான், அரக்கனும், |
| 'நூழில் |
| ஆக்கும் வெஞ் சமத்து அரிது இவன்தனை வெல்வது |
| அம்பால் |
| நீக்கி, என் இனிச் செய்வது?' என்று இராவணன் |
| நினைந்தான். |
|
காக்கல் ஆகலாக் கடுப்பினில் கணைகள் தொடுப்பன - தடுத்தற்கு முடியாத விரைவொடு அம்புகளை (இலக்குவன்); நூக்கினான் -செலுத்தினான்; கணை நுறுக்கினான் அரக்கனும்- செலுத்திய அம்புகளை நுறுங்கச் செய்த இராவணனும்; நூழில் ஆக்கும் வெஞ்சமத்து - கொன்று குவிக்கும் கொடிய போரில்; இவன்தனை வெல்வது அரிது - இவனை வெற்றி காண்பது முடியாது; அம்பால் நீக்கி - அம்பினால் போரிடுவதை விலக்கி; இனி என் செய்வது - இனிமேல் என்ன செய்வது; என்று இராவணன் நினைந்தான் - என இராவணன் ஆழமாகச் சிந்தித்தான். |
(21) |
இராவணன் மோகப்படையும் இலக்குவன் ஆழிப்படையும் |
9552. | 'கடவுள் மாப் படை தொடுக்கின், மற்று அவை |
| முற்றும் கடக்க |
| விடவும் ஆற்றவும் வல்லனேல், யாரையும் வெல்லும்; |
| தடவும் ஆற்றலைக் கூற்றையும்; தமையனைப் போலச் |
| சுடவும் ஆற்றும் எவ் உலகையும்; எவனுக்கும் |
| தோலான். |
|
கடவுள் மாப்படை தொடுக்கின் - பெரிய தெய்வ அம்புகளைத் தொடுத்தால்; மற்று அவை முற்றும் கடக்கவிடவும் ஆற்றவும் வல்லனேல்- அவ்வம்புகள் எல்லாவற்றையும் வெல்லவும் |