இந்திரசித்தின் உடலோடு இராவணன் இலங்கை புகல் |
| 9225. | என்பன பலவும் பன்னி, எடுத்து அழைத்து, இரங்கி |
| ஏங்கி, |
| அன்பினால் மகனைத் தாங்கி, அரக்கியர் அரற்றி |
| வீழ, |
| பொன் புனை நகரம் புக்கான்; கண்டவர் புலம்பும் |
| பூசல், |
| ஒன்பது திக்கும், மற்றை ஒரு திக்கும், உற்றது |
| அன்றே. |
| |
என்பன பலவும் பன்னி- என்பன போன்ற பலவற்றையும் சொல்லிக்கொண்டு; எடுத்து அழைத்து இரங்கி ஏங்கி- உரத்த குரலில் மகனை அழைத்து இரக்கமுற்று வருந்தி; அன்பினால் மகனைத் தாங்கி - அன்பினால் மகனுடைய உடம்பைத் தூக்கிக் கொண்டு; அரக்கியர் அரற்றி வீழ பொன் புனை நகரம் புக்கான் - அரக்கியர்களெல்லாம் அரற்றிக்கொண்டு சோர்ந்து வீழப் பொன்கொண்டு புனைந்த இலங்கை நகரத்தில் புகுந்தான்; கண்டவர் புலம்பும் பூசல் - அதனைக் கண்டவர்கள் புலம்பும் அழுகை ஒலி; ஒன்பது திக்கும், மற்றை ஒரு திக்கும், உற்றது அன்றே- பத்துத் திசைகளிலும் பரவியது. |
பூசல் - அழுகை ஆரவாரம். |
(40) |
| 9226. | கண்களைச் சூல்கின்றாரும், கழுத்தினைத் |
| தடிகின்றாரும், |
| புண் கொளத் திறந்து, மார்பின் ஈருளைப் |
| போக்குவாரும் |
| பண்கள் புக்கு அலம்பும் நாவை உயிரொடு |
| பறிக்கின்றாரும்,- |
| எண்களில் பெரிய ஆற்றார் - இருந் துயர் பொறுக்கல் |
| ஆற்றார். |
| |
இருந்துயர் பொறுக்கல் ஆற்றார் கண்களைச் சூழ்கின்றாரும் - (இந்திரசித்து இறந்த) அந்தப் பெரிய துயரைப் பொறுக்க முடியாதவராய் கண்களைத் தோண்டுகின்றவர்களும்; கழுத்தினைத் தடிகின்றாரும் - தம் கழுத்தினை வெட்டுகின்றவர்களும்; புண்கொள மார்பின் திறந்து ஈருளைப் போக்குவாரும் - புண் |