தாங்கவும் வலிமை யுடையவன் ஆனால்; யாரையும் வெல்லும்- எல்லாரையும் வெல்லுவான்; கூற்றையும் ஆற்றலைத் தடவும்- கூற்றுவனையும், வலிமையை ஆராய்ந்து பார்க்கும்; தமையனைப் போல- இராமனைப் போல்; எவ்வுலகையும் சுடவும் ஆற்றும்- எல்லா உலகங்களையும் சுட்டெரிக்கவும் முடியும்; எவனுக்கும் தோலான் - யார்க்கும் தோற்கமாட்டான். |
(22) |
9553. | 'மோகம் ஒன்று உண்டு, முதலவன் வகுத்தது |
| முன்னாள்; |
| ஆகம் அற்றது, கொற்றமும் சிவன்தனை அழிப்பது; |
| ஏகம் முதலிய விஞ்சையை இவன்வயின் ஏவி, |
| காகம் உற்று உழல் களத்தினில் கிடத்துவென் |
| கடிதின்'- |
|
மோகம் ஒன்று உண்டு - மோகம் என்பது ஒன்று உள்ளது; முன்னாள் முதலவன் வகுத்தது - தொடக்க காலத்தில் முதற் கடவுள் இயற்றியது; ஆகம் அற்றது- கண்ணால் காணும் வடிவம் இல்லாதது; கொற்றமும் சிவன்தனை அழிப்பது - வெற்றியையும் சிவனின் ஆற்றலையும் அழிக்கும் ஆற்றலுடையது; ஏகம் முற்றிய விஞ்சையை - தனித்தன்மை பொருந்திய இந்த விஞ்சையை; இவன் வயின் ஏவி - இலக்குவன் மீது செலுத்தி; காகம் உற்று உழல் களத்தினில் - பிணந்தின்ன வரும் காகங்கள் திரியும் போர்க்களத்தில்; கடிதின் கிடத்துவென் - விரைந்து கிடக்கச் செய்வேன். |
(23) |
9554. | என்பது உன்னி, அவ் விஞ்சையை மனத்திடை |
| எண்ணி, |
| முன்பன்மேல் வரத் துரந்தனன்; அது கண்டு முடுகி, |
| அன்பின் வீடணன் 'ஆழியான் படையினின் அறுத்தி' |
| என்பது ஓதினன்; இலக்குவன் அது தொடுத்து |
| எய்தான். |
|
என்பது உன்னி - என்பது எண்ணி; அவ்விஞ்சையை மனத்திடை எண்ணி - அந்த மோகன விஞ்சையை மனத்தில் நினைத்து; முன்பன் மேல் வரத்துரந்தனன் - வலியவனாம் இலக்குவன் மேல் செல்ல விடுத்தான்; அன்பின் வீடணன் - அன்புடைய வீடணன்; அது கண்டு முடுகி, ஆழியான் படையினின் |