அறுத்தி - அதனைக் கண்டு விரைந்து சக்கரப் படையுடைய நாராயணனது கணையால் இதனை அறுப்பாயாக; என்பது ஓதினன் - என்பதைக் கூறினான்; இலக்குவன் அது தொடுத்து எய்தான் - இலக்குவன் அந்த நாராயணன் அம்பைப் பூட்டி விடுத்தான். |
(24) |
வீடணனால் படைவலி அழிய, இராவணன் அவன் மேல் வேல் எறிதல் |
9555. | வீடணன் சொல, விண்டுவின் படைக்கலம் விட்டான், |
| மூடு வெஞ் சின மோகத்தை நீக்கலும், முனிந்தான் |
| 'மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட, வந்த |
| கேடு தம்நமக்கு' என்பது மனம்கொண்டு கிளர்ந்தான். |
|
வீடணன் சொல- வீடணன் சொல்ல; விண்டுவின் படைக்கலம் விட்டான் - அவன் சொல்லியபடி நாராயணனது அம்பை விட்டான்; மூடு வெஞ்சின மோகத்தை நீக்கலும்- தன்னை மூடி மயக்கவந்த கொடிய சினத்தையுடைய மோகத்தை இலக்குவன் விலக்கலும்; முனிந்தான் - இராவணன் வெகுண்டான்; மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட - பக்கத்திலிருந்த வீடணன் உபாயங்களைச் சொல்லிட அதை இலக்குவன் மதித்து ஏற்றிட; கேடு நம் தமக்கு வந்த - நமக்குக் கேடு வந்தன;என்பது மனங்கொண்டு கிளர்ந்தான்- என்பதை உளத்தில் எண்ணிக் கிளர்ச்சியுற்றான். |
(25) |
9556. | மயன் கொடுத்தது, மகளொடு; வயங்கு அனல் |
| வேள்வி, |
| அயன் படைத்துளது; ஆழியும் குலிசமும் அனையது; |
| உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது; உருமின், |
| சயம்தனைப் பொரும் தம்பியை, உயிர் கொளச் |
| சமைந்தான். |
|
மகளொடு மயன் கொடுத்தது - (முன்னர், திருமணத்தின் போது இராவணனுக்கு) மண்டோதரியாம் மகளொடு மயன் அளித்தது; வயங்கு அனல் வேள்வி அயன் படைத்துளது - பிரமனால் யாகத் தீயில் படைக்கப்பட்ட படையாம்; ஆழியும் குலிசமும் அனையது - திருமாலின் சக்கரப்படையும் இந்திரனின் வச்சிரப்படையும் போன்றது; உயர்ந்த கொற்றமும் ஊழியும் |