கடந்துளது - உயர்ந்த வெற்றி அளிப்பதிலும் ஊழிக் காலத்தையும் கடந்துளதாகிய; உருமின் - இடி போன்ற வேற்படையாலே; சயம் தனைப் பொரும் தம்பியை - வெற்றியையே உவமை கூறத்தக்க வீடணனது; உயிர்கொளச் சமைந்தான் - உயிரைக் கொள்வதற்குத் துணிந்தான்.
|
(26) |
9557. | விட்ட போதினின் ஒருவனை வீட்டியே மீளும், |
| பட்ட போது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும். |
| வட்ட வேல்அது வலம்கொடு வாங்கினன், வணங்கி, |
| எட்ட நிற்கலாத் தம்பிமேல் வல் விசைத்து எறிந்தான். |
|
விட்ட போதினின் ஒருவனை வீட்டியே மீளும்- வேலை எறிந்த போது அந்த ஒரு பகைவனை வீழ்த்தி விட்டே திரும்பும்; பட்டபோது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும்- மேலே பட்ட போது தன்னைப் படைத்த பிரமனே ஆனாலும் கொல்லும் தன்மையது; வட்டவேல் அது வலங்கொடு வாங்கினான் வாங்கி - திருத்தமான வேலை வலந்திரிந்து எடுத்து வணங்கி; எட்ட நிற்கலாத் தம்பிமேல் - தொலைவில் நிற்காத அருகில் உள்ள தம்பி வீடணன் மேல்; வல் விசைத்து எறிந்தான்- மிகுந்த வேகத்துடன் எறிந்தான். |
வட்டம் - திருத்தம். |
(27) |
வீடணன், ஈது என் உயிர் அழிக்கும்' என இலக்குவன் 'போக்குவேன் அஞ்சல் நீ' எனல் |
9558. | எறிந்த காலையில், வீடணன் அதன் நிலை எல்லாம் |
| அறிந்த சிந்தையன், 'ஐய! ஈது என் உயிர் அழிக்கும்; |
| பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை' என்றலும், |
| பெரியோன், |
| 'அறிந்து போக்குவல்; அஞ்சல், நீ!' என்று இடை |
| அணைந்தான். |
|
எறிந்த காலையில் - இராவணன் வேலினை எறிந்த போது; அதன் நிலை எல்லாம் அறிந்த சிந்தையன் வீடணன் - அவ்வேலின் திறம் முழுதும் அறிந்த அறிவுடையோனாகிய வீடணன்; ஐய! ஈது என் உயிர் அழிக்கும்- ஐயனே! இவ்வேல் என் உயிரை வாங்கும்; பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை என்றலும் - தடுத்துச் |