செய்தற்குரிய உபாயம் வேறு இல்லை என்று கூறியதும்; பெரியோன் அறிந்து போக்குவல் - இதைப் போக்கும் திறம் அறிந்து போக்குகின்றேன்; நீ அஞ்சல் - நீ பயப்படாதே; என்று இடை அணைந்தான் - எனக் கூறி வீடணன் நின்ற இடத்தில் வந்து நின்றான். |
(28) |
9559. | எய்தவாளியும், ஏவின படைக்கலம் யாவும், |
| செய்த மா தவத்து ஒருவனைச் சிறு தொழில் |
| தீயோன் |
| வைத வைவினில் ஒழிந்தன; 'வீடணன் மாண்டான், |
| உய்தல் இல்லை' என்று, உம்பரும் பெரு மனம் |
| உலைந்தார்.. |
|
எய்த வாவியும் - இலக்குவன் எய்த அம்புகளும்; ஏவின படைக்கலம் யாவும் - ஏவிய படைக்கருவிகள் எல்லாம்; செய்த மாதவத்து ஒருவனை - சிறந்த தவத்தால் பெரியோனை; சிறு தொழில் தீயோன் வைத வைவினில் ஒழிந்தன- கீழான ஏவல் புரியும் தீயோன் சபித்த சாபம் பலிக்காது போயின போலப் பயனின்றிப் போயின; வீடணன் மாண்டான் - வீடணன் செத்தான்; உய்தல் இல்லை என்று - பிழைப்பது இனி இல்லை என்று; உம்பரும் பெருமனம் உலைந்தோர் - தேவர்களும் தம்முடைய பெருமை மிக்க மனம் அழிந்தனர். |
(29) |
இலக்குவன் வேலைத் தன் மார்பில் ஏற்க எதிர்தல் |
9560. | 'தோற்பென் என்னினும், புகழ் நிற்கும், தருமமும் |
| தொடரும் |
| ஆர்ப்பர் நல்லவர்; அடைக்கலம் புகுந்தவன் |
| அழியப் |
| பார்ப்பது என்? நெடும் பழி வந்து தொடர்வதன் |
| முன்னம் |
| ஏற்பென், என் தனி மார்பின்' என்று, இலக்குவன் |
| எதிர்ந்தான். |
|
தோற்பென் என்னினும் - (வீடணனைக் காக்க வேலை ஏற்று) என் உயிரை இழந்தேன் என்றாலும்; புகழ் நிற்கும் - (அடைக்கலம் காத்த) புகழ் நிலைத்து நிற்கும்; தருமமும் தொடரும் - அறமும் என்னைத் தொடர்ந்து வரும்; நல்லவர் ஆர்ப்பர்- நல்ல மனிதர்கள் |