பக்கம் எண் :

214யுத்த காண்டம் 

மகிழ்ச்சியால்   ஆரவாரம் செய்வர்; அடைக்கலம் புகுந்தவன்
அழியப் பார்ப்பது என்
- அடைக்கலமாக அடைந்த வீடணன்
இறக்கப்   பார்த்துக்  கொண்டிருப்பது  எதற்கு?  நெடும் பழி
வந்து தொடர்வதன் முன்னம்
- (அடைக்கலப்   பொருளைக்
காவாமல் விட்டான் என்று) நெடுங்காலம்   நிற்கும் பழி   வந்து
தொடர்வதற்கு முன்னரே; என் தனி மார்பின் ஏற்பென்- எனது
ஒப்பற்ற  மார்பில்  அவ்வேலை ஏற்பேன்; என்று  இலக்குவன்
எதிர்ந்தான்
- என்று இலக்குவன் எதிர் நின்றான்; 
 

(30)
 

வேலை ஏற்க பலரும் முந்த இறுதியில் இலக்குவன் ஏற்றல்
 

9561.

இலக்குவற்கு முன் வீடணன் புகும்; இருவரையும்
விலக்கி, அங்கதன் மேற்செலும்; அவனையும் விலக்கி,
கலக்கும் வானரக் காவலன்; அனுமன் முன் கடுகும்;
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல்

ஆமோ?

 

இலக்குவற்கு   முன்  வீடணன் புகும் - இலக்குவனுக்கு
முன்னர் வீடணன் செல்வான்; இருவரையும் விலக்கி அங்கதன்
மேற்செலும்
- அவ்விருவரையும்  விலக்கி  விட்டு  வாலி மகன்
அங்கதன்   முன்  புகுவான்;  அவனையும்  விலக்கி  வானரக்
காவலன் கலக்கும்
- அங்கதனை விலக்கிவிட்டு வானரர் அரசாம்
சுக்கிரீவன்  முந்துவான்;  அனுமன் முன்  கடுகும்  - அனுமன்
விரைந்து செல்வான்; அலக்கண் அன்னதை  -   அப்படிப்பட்ட
துன்பத்தை; இன்னது என்று உரை செயல் ஆமோ- இத்தகையது
என்று கூற முடியுமா? 
  

(31)
 

9562.

முன் நின்றார் எலாம் பின் உற, காலினும் முடுகி,
'நின்மின்; யான் இது விலக்குவென்' என்று உரை 

நேரா,

மின்னும் வேலினை, விண்ணவர் கண் புடைத்து 

இரங்க,

பொன்னின் மார்பிடை ஏற்றனன், முதுகிடைப் போக.
 

முன் நின்றார் எலாம் பின் உற- முன்னே  சென்றவர்கள்
எல்லாம்   பின்னே   நிற்க; காலினும்  முடுகி -  காற்றினும்
விரைந்து சென்று;  நின்மின்  யான்  இது விலக்குவென் -
எல்லாரும்