நில்லுங்கள் நான் இதை விலக்குவேன்; என்று உரை நேரா மின்னும் வேலினை - என்று சொல்லிக்கொண்டே ஒளி வீசும் வேலை; விண்ணவர் கண் புடைத்து இரங்க- தேவர்கள் கண்மேல் மோதிக் கொண்டு வருந்த; பொன்னி்ன் மார்பிடை - பொன்னிறமுள்ள மார்பில் பட்டு; முதுகிடைப்போக ஏற்றனன் - முதுகுக்குள்ளே ஊடுருவிப் போக (அவ்வேலை) ஏற்றான் இலக்குவன். |
(32) |
வீடணன், இராவணன் தேர்க் குதிரையையும் சாரதியையும் அழித்தல் |
9563. | 'எங்கு நீங்குதி நீ?' என, வீடணன் எழுந்தான், |
| சிங்கஏறு அன்ன சீற்றத்தான், இராவணன் தேரில் |
| பொங்கு பாய் பரி சாரதியொடும் படப் புடைத்தான் |
| சங்க வானவர் தலை எடுத்திட, நெடுந் தண்டால். |
|
எங்கு நீங்குதி நீ என `வீடணன் எழுந்தான்- (போர்க்களத்தை விட்டுப் புறப்படும் இராவணனைப் பார்த்து) வீடணன், 'நீ எங்கே செல்கிறாய் என்று எழுந்து; சிங்கஏறு அன்ன சீற்றத்தான் - ஆண் சிங்கம் போன்ற கோபம் உடையவனாய்; இராவணன் தேரில்- இராவணனுடைய தேரிலே; பொங்குபாய் பரி சாரதியொடும் பட - கிளர்ந்து பாயும் குதிரையொடு தேரோட்டியும் இறந்திட; சங்க வானவர் தலை எடுத்திட நெடுந்தண்டால் புடைத்தான் - திரளாயுள்ள தேவர்கள் மீண்டும் கிளர்ச்சி பெற்றுயரத் தன் நீண்ட தண்டாயுதத்தால் அடித்தான். |
(33) |
9564. | சேய் விசும்பினில் நிமிர்ந்து நின்று, இராவணன் சீறி, |
| பாய் கடுங் கணை பத்து அவன் உடல் புகப் பாய்ச்சி, |
| ஆயிரம் சரம் அனுமன்தன் உடலினில் அழுத்தி, |
| போயினன், 'செரு முடிந்தது' என்று, இலங்கை ஊர் |
| புகுவான். |
|
சேய் விசும்பினில் நிமிர்ந்து நின்று இராவணன் சீறி - தூரத்தே உள்ள வானில் உயரச் சென்று இராவணன் சீற்றம் கொண்டு; அவன் உடல் புகப் பாய் கடுங்கணை பத்து பாய்ச்சி - அவ்வீடணன் உடம்பிலே பாய்கின்ற கொடிய அம்புகள் பத்தை அழுத்திவிட்டு; ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்த - ஆயிரம் அம்புகளை அனுமனின் உடம்பில் பாய்ச்சிவிட்டு; செரு முடிந்தது |