பக்கம் எண் :

216யுத்த காண்டம் 

என்று- போர் முற்றுப் பெற்றது என்று; இலங்கை ஊர் புகுவான்
போயினன்
- இலங்கை நகரில் புக, (இராவணன்) சென்றான்.
 

(34)
 

9565.

'தேடிச் சேர்ந்த என் பொருட்டினால், உலகுடைச்

செல்வன்

வாடிப் போயினன்; நீ இனி வஞ்சனை மதியால்
ஓடிப் போகுவது எங்கு? அடா! உன்னொடும் உடனே
வீடிப் போவென்' என்று அரக்கன்மேல் வீடணன்

வெகுண்டான்.

 

தேடிச்   சேர்ந்த  என்   பொருட்டினால் - அடைக்கலமாகப்
புகுந்த   என்னைக்  காப்பதற்காக;  உலகுடைச்  செல்வன்  வாடிப்
போயினன்
  -  உலகம்  எல்லாம்  தன்னதாக  உடைய   இலக்குவன்
வாடிப்  போனான்;  இனி  வஞ்சனை  மதியால்  ஓடிப்  போகுவது
எங்கு?
-  இனிமேல்  உன்னுடைய  வஞ்சனை  புத்தியால்  நீ   ஓடிப்
போவது எங்கு? அடா! உன்னொடும் உடனே வீடிப் போவென்
என்று
- அடா உன்னோடு இப்போதே போர் செய்து உன்னைக் கொன்று
நானும் இறப்பேன்  என்று;  அரக்கன் மேல் வீடணன்  வெகுண்டான்
- இராவணன் மீது வீடணன் கோபித்தான்.
 

(35)
 

வீடணனைக் கொல்லாது விடுத்து இராவணன் மீளுதல்
 

9566.

'வென்றி என் வயம் ஆனது; வீடணப் பசுவைக்
கொன்று இனிப் பயன் இல்லை' என்று, இராவணன்

கொண்டான்;

நின்றிலன், ஒன்றும் நோக்கிலன், முனிவு எலாம்

நீத்தான்;

பொன் திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் 

புக்கான்.

 

வென்றி என் வயம் ஆனது - வெற்றி என்  வசம்  ஆயிற்று;
வீடணப் பசுவைக் கொன்று இனிப் பயன் இல்லை என்று- பசுப்
போன்ற வீடணனைக் கொன்று இனிமேல் அடையும் நன்மை ஒன்றும்
இல்லை என்று; இராவணன் கொண்டான் - இராவணன் மனத்தில்
நினைத்தான்;   நின்றிலன்   -   நிற்கவும்   இல்லை;   ஒன்றும்
நோக்கலன்
   -   போர்க்களத்து    எதையும்    பார்க்கவில்லை;
முனிவு எலாம் நீத்தான்- கோபம் எல்லாம் விட்டவனாய்; பொன்