திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புக்கான் - அழகிய மதிலை உடைய இலங்கை நகர்க்குள் சென்றான். |
(36) |
வீடணன் ஆற்றாது அரற்றுதல் |
9567. | அரக்கன் ஏகினன்; வீடணன் வாய் திறந்து அரற்றி, |
| இரக்கம்தான் என இலக்குவன் இணை அடித் |
| தலத்தில், |
| கரக்கல் ஆகலாக் காதலின் வீழ்ந்தனன் கலுழ்ந்தான்; |
| குரக்கு வெள்ளமும் தலைவரும் துயரிடைக் |
| குளித்தார். |
|
அரக்கன் ஏகினன் - இராவணன் இலங்கைக்குள் சென்றான்; வீடணன் வாய் திறந்து அரற்றி - வீடணன் வாய் திறந்து புலம்பி; இரக்கம் தான் என இலக்குவன் இணை அடித்தலத்தில் - இரக்கப் பண்பே உருவான இலக்குவனின் இரண்டு காலடியில்; கரக்கல் ஆகலாக் காதலின் - அடக்க முடியாத அன்பினால்; கலுழ்ந்தான் வீழ்ந்தனன் - கண்ணீர் சிந்தி விழுந்தான்; குரக்கு வெள்ளமும் தலைவரும் துயரிடைக் குளித்தார்- குரங்குச் சேனையும் அதன் தலைவர்களும் துன்பத்தில் ஆழ்ந்தார்கள். |
(37) |
9568. | பொன் அரும்பு உறு தார்ப் புயப் பொருப்பினான் |
| பொன்ற |
| என் இருந்து நான்? இறப்பென், இக் கணத்து; |
| எனை ஆளும் |
| மன் இருந்து இனி வாழ்கிலன்' என்றனன் மறுக, |
| 'நில், நில்' என்றனன், சாம்பவன் உரை ஒன்று |
| நிகழ்த்தும். |
|
பொன் அரும்பு உறுதார்ப் புயப் பொருப்பினான் பொன்ற - அழகு மிக்க அரும்பால் கட்டிய மாலையணிந்த தோள்களாம் மலையை உடைய இலக்குவன் இறக்க; நான் இருந்து என்? - நான் உயிரோடு இருந்து என்ன பயன்? இக்கணத்து இறப்பென்- இந்த நொடியே இறப்பேன்; எனை ஆளும் மன் இருந்து இனி வாழ்கிலன் என்றனன் மறுக - என்னை அடைக்கலமாய்க் கொண்ட இராமன் இனி உயிரோடு வாழான் என்று மனங்கலங்கி நிற்க; சாம்பவான் 'நில் நில்' என்றனன்- சாம்பவான் அவனைத் |