பக்கம் எண் :

218யுத்த காண்டம் 

தடுத்து 'நில் நில்' என்று கூறி,; உரை ஒன்று நிகழ்த்தும்-
சொல் ஒன்று சொல்வான். 

(38)
 

9569.

'அனுமன் நிற்க, நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது

அறிவோ?

நினையும் அத்துணை மாத்திரத்து, உலகு எலாம்

நிமிர்வான்,

வினையின் நல் மருந்து அளிக்கின்றான்;

உயிர்க்கின்றான், வீரன்

தினையும் அல்லல் உற்று அழுங்கன்மின்' என்று இடர்

தீர்த்தான்.

 

அனுமன் நிற்க நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ-
அனுமன்   நம்   பக்கம்   இருக்கும்   போது   நாம் அரிய உயிர்
நீங்கியதற்கு   வருந்துதல்  அறிவுடைமை  ஆகுமோ;   நினையும்
அத்துணை மாத்திரத்து உலகு எலாம் நிமிர்வான்
- அனுமன்
எண்ணிய அளவில் உலகெலாம் நிமிர்கின்ற பேருருவுடையவனாய்;
வினையின்  நல் மருந்து அளிக்கின்றான் -  நம்   புண்ணிய
வினையால்  நல்ல  மருந்தைக்கொண்டு   அளிக்கின்றான்; வீரன்
உயிர்க்கின்றான்
   -   அளித்தவுடன்   இலக்குவன்    உயிர்
பெற்றெழுகின்றான்; தினையும் அல்லல் உற்று அழுங்கன்மின்
என்று  இடர் தீர்த்தான்
- மிகச்சிறிய  அளவும்  துன்பமுற்று
வருந்தாதீர்கள்  என்று  சாம்பவான்  கூறி வீடணன் முதலியோர்
துன்பம் தீர்த்தான். 
 

(39)
 

அனுமன் மருந்து கொண்டு வந்து இலக்குவனை உயிர்ப்பித்தல்
 

9570.

மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம்வாங்கி,
'இருத்தியோ, கடிது ஏகலை? இளவலை இங்ஙன்
வருத்தம் காணுமோ மன்னவன்?' என்னலும்,

அன்னான்

கருத்தை உன்னி, அம் மாருதி உலகு எலாம்

கடந்தான்.

 

மருத்தின் காதலன் - வாயுமகனாகிய அனுமனின்; மார்பிடை
அம்பு  எலாம்  வாங்கி
  -  மார்பில்  தைத்த  அம்பு  எலாம்
வாங்கிவிட்டு; இருத்தியோ கடிது ஏகலை- நீ மருந்து கொண்டு
வராமல்