இருப்பாயோ விரைந்து செல்ல மாட்டாயா; மன்னவன் இளவலை இங்ஙனன் வருத்தம் காணுமோ - இராமன் தன் தம்பியாம் இலக்குவனை இவ்வருத்த நிலையில் காண்பானா? என்னலும் - என்று சாம்பவன் கூற; அன்னான் கருத்தை உன்னி - அத்தகையோன் எண்ணத்தை நினைத்துப் பார்த்து; அம்மாருதி உலகு எலாம் கடந்தான்- அவ்வனுமான் உலகங்களை எல்லாம் கடந்து சென்றான்.
|
(40) |
அறுசீர் ஆசிரிய விருத்தம் |
9571. | உய்த்து ஒரு திசைமேல் ஓடி உலகு எலாம் கடக்கப் |
| பாய்ந்து, |
| மெய்த் தகு மருந்துதன்னை, வெற்பொடும் |
| கொணர்ந்த வீரன், |
| பொய்த்தல் இல் குறி கெடாமே பொது அற நோக்கி, |
| பொன்போல் |
| வைத்தது வாங்கிக் கொண்டு வருதலில், வருத்தம் |
| உண்டோ? |
|
உய்த்து ஒரு திசை மேல் ஓடி- (தன் கருத்தை மருந்தின் மீது) செலுத்தி வட திசையில் ஓடி; உலகு எலாம் கடக்கப் பாய்ந்து - உலகங்கள் எல்லாம் கடந்திடுமாறு பாய்ந்து சென்று; மெய்த்தகு மருந்து தன்னை - மெய்ம்மையுடன் பொருந்திய மருந்தை; வெற்பொடும் கொணர்ந்த வீரன்- மருத்து மலையுடன் முன்னர் கொண்டு வந்த வீரனாம் அனுமான்; பொய்த்தல் இல்குறி கெடாமே பொது அறநோக்கி - பொய்யில்லாத அடையாளங்களை நன்கு பார்த்து; பொன் போல் வைத்தது வாங்கிக் கொண்டு வருதலில் வருத்தம் உண்டோ?- பாதுகாப்பாக வைத்த பெருஞ்செல்வம் போல் போற்றி வைத்ததை மீண்டும் கொண்டு வருவதில் துன்பம் உண்டோ? (இல்லை) |
(41) |
9572. | தந்தனன், மருந்துதன்னை; தாக்குதல் முன்னே |
| யோகம் |
| வந்தது, மாண்டார்க்கு எல்லாம், உயிர் தரும் |
| வலத்தது என்றால், |