பக்கம் எண் :

22யுத்த காண்டம் 

கொள்ளுமாறு   மார்பினைப்   பிளந்து   திறந்து, ஈரலை
வெளிப்படுத்துவாரும்; பண்கள் புக்கு அலம்பும் நாவை -
பண்கள்   புகுந்து   ஒலிக்கின்ற   நாவை;   உயிரொடு
பறிக்கின்றாரும்
- உயிரோடு பறிக்கின்றவர்களும் ஆகிய
பெண்கள்; எண்களில் பெரிய ஆற்றார்- எண்ணில்
அடங்காதவராயினர்;
 

சூல்கின்றார் - தோண்டுகின்றார். தடிதல் - வெட்டுதல்
''வாளோச்சிமிகத் தடிந்தார்''  (பு.வெ. 5,8) ஈருள் - ஈரல். 
அலம்புதல்  -  ஒலித்தல்,   இந்திரசித்தின்    இறத்தல்
துன்பத்தைத் தாள முடியாதவர்களின் செயல் கூறப்பட்டது.
துன்பத்தின் மிகுதி காட்டுவான் பெண்கள் மேல் வைத்துக்
கூறினார். 
 

(41)
 

9227.

மாதிரம் கடந்த திண் தோள் மைந்தன்தன் மகுடச்  

சென்னி

போதலைப் புரிந்த யாக்கை பொறுத்தனன் புகுதக் 

கண்டார்,

ஓத நீர் வேலை அன்ன கண்களால் உகுத்த  

வெள்ளக்

காதல் நீர் ஓடி, ஆடல் கருங் கடல் மடுத்தது அன்றே. 

 

மாதிரம்   கடந்த    திண்தோள்   மைந்தன் தன்-
திசைகளையெல்லாம்  வென்ற  திண்ணிய  தோள்களையுடைய 
மகனுடைய; மகுடச் சென்னி போதலைப் புரிந்த யாக்கை
முடியணிந்த  தலை  நீங்கப்  பெற்ற  உடலை;  பொறுத்தனன் 
புகுதக் கண்டார்
- சுமந்தவனாய் இராவணன் இலங்கைக்குள் 
புகக் கண்டவர்கள்; ஓதநீர்  வேலை  அன்ன  கண்களால்
வெள்ளமான   நீரைக்  கொண்ட  கடலைப்  போன்ற  பரந்த 
கண்களால்; உகுத்த வெள்ளக் காதல் நீர் ஓடி- சொரிந்த, 
அன்பினை வெளிப்படுத்தும் வெள்ளநீர் ஓடிச்சென்று; ஆடல் 
கருங்கடல் மடுத்தது
-  அலையாடுதலை  யுடைய  கரிய 
கடலைக் கலந்தது.
 

அன்று, ஏ - அசைகள். 
 

(42)
 

9228. 

ஆவியின் இனிய காதல் அரக்கியர் முதல்வர் ஆய 

தேவியர் குழாங்கள் சுற்றி, சிரத்தின்மேல் தளிர்க் 

கை சேர்த்தி,

ஓவியம் வீழ்ந்து வீழ்ந்து புரள்வன ஒப்ப, ஒல்லைக் 

கோ இயல் கோயில் புக்கான், குருதி நீர்க் குமிழிக் 

கண்ணான்.