பக்கம் எண் :

220யுத்த காண்டம் 

நொந்தவர் நோவு தீர்க்கச் சிறிது அன்றோ?

நொடிதல் முன்னே

இந்திரன் உலகம் ஆர்க்க, எழுந்தனன் இளைய 

வீரன்.

 

தந்தனன் மருந்து தன்னை - அனுமன் தந்த நல்ல மருந்தை;
தாக்குதல்  முன்னே  யோகம்  வந்தது- மருந்தின் வாசனை
வருமுன்னே நல்வினை கூடிற்று; மாண்டார்க்கு எல்லாம் உயிர்
தரும்  வலத்தது  என்றால்
- செத்தவர்  எல்லார்க்கும் உயிர்
அளிக்கும்  வலிமையுடையது  என்றால்;  நொந்தவர்   நோவு
தீர்க்கச்   சிறிது   அன்றோ 
 -  வேலால்   துன்புற்றவரின்
துன்பம்  தீர்ப்பது  சிறிய  சொல் அல்லவா? இந்திரன் உலகம்
ஆர்க்க
- தேவர் உலகம் ஆரவாரம் செய்ய; நொடிதல் முன்னே
இளைய வீரன் எழுந்தனன்
- நொடிப் பொழுதில் இலக்குவன்
உயிர் பெற்று எழுந்தான்.
 

சில சுவடிகளில் இச்செய்யுளோடு இப்படலம் முடிவுறும்.
 

(42)
 

இலக்குவன் அனுமனைத் தழுவி, வீடணன் நலம் உசாவல்
 

9573.

எழுந்து நின்று, அனுமன்தன்னை இரு கையால்

தழுவி, 'எந்தாய்!

விழுந்திலன் அன்றோ, மற்று அவ் வீடணன்!' என்ன,

விம்மித்

தொழும் துணையவனை நோக்கி, துணுக்கமும்

துயரும், நீக்கி

'கொழுந்தியும் மீண்டாள்; பட்டான் அரக்கன்' என்று

உவகை கொண்டான்

 

எழுந்து நின்று- இலக்குவன் எழுந்து நின்று; அனுமன் தன்னை
இரு   கையால்   தழுவி
-   அனுமனைத்  தன்  இரு கைகளாலும்
தழுவிக்கொண்டு;  எந்தாய்  விழுந்திலன்   அன்றோ    மற்று
அவ்வீடணன் என்ன
- எம் தந்தை போன்றவனே! அந்த வீடணன்
இறந்து பட வில்லை அல்லவா  என்று கேட்க; விம்மித்  தொழும்
துணையவனை  நோக்கி 
 -  (அது கேட்டுத்)  தேம்பித்  தன்னை
வணங்கும் துணைவனைப் பார்த்து; துணுக்கமும் துயரும் நீக்கி-
மன   நடுக்கமும்  துன்பமும்  தீர்ந்து;  அரக்கன்  பட்டான் -
இராவணன்   இனி   மாண்டான்;  கொழுந்தியும்  மீண்டாள் -
சீதையும் சிறை மீண்டாள்; என்று உவகை கொண்டான் - என
மகிழ்ச்சி கொண்டான். 
 

(43)