வானரத் தலைவர் இராமன்பால் செல்ல, அவன் 'விளைந்தது என்?' எனல் |
9574. | ''தருமம்'' என்று அறிஞர் சொல்லும் தனிப் |
| பொருள்தன்னை இன்னே, |
| கருமம் என்று அனுமன் ஆக்கிக் காட்டிய தன்மை |
| கண்டால், |
| அருமை என் இராமற்கு? அம்மா! அறம் வெல்லும், |
| பாவம் தோற்கும் |
| இருமையும் நோக்கின்' என்னா, இராமன்பால் எழுந்து |
| சென்றார். |
|
தருமம் என்று அறிஞர் சொல்லும் தனிப்பொருள் தன்னை- அறம் என அறிஞர் கூறும் ஒப்பற்ற பொருளை; இன்னே கருமம் என்று - இப்போதே செய்யத் தக்கது என்று; அனுமன் காட்டிய தன்மை - அனுமன் நிரூபித்துக் காட்டிய தன்மை; கண்டால் இராமற்கு அருமை என்- நோக்கினால் இராமனுக்கு செய்தற்கு அரிய பொருள் எது? (ஒன்றுமில்லை); இருமையும் நோக்கின்- இம்மை மறுமையை ஆராயின்; அறம் வெல்லும் பாவம் தோற்கும் - அறம் வெல்லும் மறம் தோற்கும்; என்னா இராமன் பால் எழுந்து சென்றார்- என்று கூறி இராமனிடத்து எழுந்து போனார். |
(44) |
9575. | ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து |
| உம்பரோடும் |
| குன்றுகள் பலவும், சோரிக் குரை கடல் அனைத்தும் |
| தாவிச் |
| சென்று அடைந்து, இராமன் தன்னைத் திருவடி |
| வணக்கம் செய்தார், |
| வென்றியின் தலைவர், கண்டஇராமன், 'என் |
| விளைந்தது?' என்றான். |
|
ஒன்று அல பல என்று - ஒன்று அல்லாதன பல என்று கூறுமாறு; உயர்பிணத்து குன்றுகள் பலவும் - உயர்ந்த பிணக் குன்றுகள் பலவற்றையும்; சோரிக் குரைகடல் அனைத்தும் - ஒலிக்கும் இரத்தக் கடல் அனைத்தும்; உம்பரோடும் தாவிச் சென்று, அடைந்து - தேவர்களோடும் கடந்து சென்று சேர்ந்து; இராமன் தன்னை திருவடி வணக்கம் செய்தார் - இராமனின் திருவடிகளை வணங்கினார்கள்; வென்றியின் தலைவர்- வெற்றி கண்ட |