தலைவர்கள்; கண்ட இராமன் - அவ்வாறு வணங்கக் கண்ட இராமன்; விளைந்தது என் என்றான் - நடந்தது என்ன என்று கேட்டான்.
|
(45) |
இராமன் அனுமனை வாழ்த்துதல் |
9576. | உற்றது முழுதும் நோக்கி, ஒழிவு அற, உணர்வு உள் |
| ஊற, |
| சொற்றனன் சாம்பன்; வீரன் அனுமனைத் தொடரப் |
| புல்லி, |
| 'பெற்றனன் உன்னை; என்னை பெறாதன? |
| பெரியோய்! என்றும் |
| அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக!' என்றான். |
|
சாம்பன் உற்றது முழுதும் நோக்கி- (அது கேட்ட) சாம்பன் நிகழ்ந்ததை முழுவதும் சிந்தித்து; ஒழிவு அற உணர்வுள் ஊறச் சொற்றனன் - ஒன்று விடாமல் இராமனின் உணர்வில் பதியும் வண்ணம் கூறினான்; வீரன் அனுமனைத் தொடரப்புல்லி - வீரனாம் அனுமானை இராமன் நெருங்கத் தழுவி; பெரியோய்! உன்னைப் பெற்றனன்- பெரியோனை! உன்னைப் பெற்று விட்டேன்; என்னை பெறாதன் - இனிப் பெறாத பேறு என்ன உளது? என்றும் அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக என்றான்- எக்காலத்தும் இடையறவு பட்டு முடியாத நீண்ட ஆயுளை உடையவன் ஆகுக என வாழ்த்தினான்.
|
(46) |
இலக்குவன் இராமன் பாராட்டல் |
9577. | புயல் பொழி அருவிக் கண்ணன், பொருமலன் |
| பொங்குகின்றான், |
| உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவத் |
| தம்பி, |
| துயர் தமக்கு உதவி, மீளாத் துறக்கம் பெற்று, |
| உயர்ந்த தொல்லைத், |
| தயரதற் கண்டால் ஒத்த தம்முனைத் தொழுது |
| சார்ந்தான். |