பக்கம் எண் :

 வேல் ஏற்ற படலம்223

புயல் பொழி அருவிக் கண்ணன்- மேகம் போல் பொழியும்
கண்ணீர் அருவியை உடைய கண்களுடையவனும்; பொருமலன்
பொங்குகின்றான்
- அழுது விம்முபவனும் மகிழ்ச்சி பொங்கும்
மனமுடையவனும்; உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன
உருவத்தம்பி
- உயிர்     பிரிந்து    வெளியே நிற்க அதைப்
பிரிந்த உடம்பு போல வாடிய உருவமுடையவனும் ஆகிய தம்பி
இலக்குவன்; துயர் தமக்கு    உதவி - தமக்குப் பிரிவாற்றாத்
துன்பம் கொடுத்து விட்டு; மீளாத் துறக்கம் பெற்று உயர்ந்த
தொல்லைத் தயரதற் கண்டால் ஒத்த
- இறந்து மீண்டும் வராத
துறக்க உலகைப் பெற்றுயர்வுற்ற பழைய தயரதனை வரக்கண்டு
மகிழ்ந்தது போன்று; தம்முனைத் தொழுது சார்ந்தான்- தன்
அண்ணன் இராமனை வணங்கி வந்தடைந்தான்.
 

(47)
 

9578.

இளவலை நோக்கி, 'ஐய! இரவிதன் குலத்துக்கு 

ஏற்ற

அளவினம்; அடைந்தோர்க்கு ஆகி, மன் உயிர்

கொடுத்த வன்மைத்

துளவு இயல் தொங்கலாய்! நீ அன்னது துணிந்தாய்

என்றால்

அளவு இயல் அன்று; செய்தற்கு அடுப்பதே ஆகும்

அன்றே?

 

இளவலை நோக்கி - தன்னைத் தொழுது வந்த தம்பியைப்
பார்த்து;     ஐய! துளவு    இயல் தொங்கலாய்!- ஐயனே!
துளவத்தால் கட்டிய மாலை அணிந்தவனே; இரவி தன் குலத்துக்கு
ஏற்ற    அளவினம்
- சூரிய    குல   இயல்புக்குத் தக்கபடி;
அடைந்தோர்க்கு ஆகி - தம்மை அடைக்கலமாக வந்தவர்க்கு
உதவுவோர் ஆகி; மன் உயிர் கொடுத்த வன்மை- நிலை பெற்ற
உயிர்   கொடுக்கும் வலிய    செயல்; அன்னது    துணிந்தாய்
என்றால்
- நீ    அச்செயல்    செய்யத்   துணிந்தாய் என்றால்;
அளவியல் அன்று- அது நின் தகுதிக்கு மிகுதியான அளவினை
உடையதன்று; அடுப்பதே ஆகும் அன்றே - செய்தற்கு ஏற்ற
செயலே ஆகும் அல்லவா? 

(48)
 

9579.

புறவு ஒன்றின் பொருட்டின் யாக்கை புண் உற

அரிந்த புத்தேள்

அறவனும், ஐய! நின்னை நிகர்க்கிலன்; அப்பால் 

நின்ற