பக்கம் எண் :

 வானரர் களம் காண் படலம்227

கழுகொடு பருந்தும், பாறும், பேய்களும், கணங்கள்

மற்றும்,

குழுவிய களத்தைக் கண்ணின் நோக்கினர்,

துணுக்கம் கொண்டார்.

 

தலைவர் எல்லாம் தொழுதனர்  -   வானரத் தலைவர்கள்
எல்லாம் (இராமனைத்) தொழுதனர்; தோன்றிய காதல் தூண்ட -
உண்டான ஆசை தூண்டுவதால்; இராவணற்கு இளவலோடும் -
இராவணன்  தம்பியாம்  வீடணனோடும்; 'எழுக' என விரைவின்
சென்றார்
- 'எழுக' என்று கூறி விரைவாகச் சென்றனர்; கழுகொடு,
பருந்தும்  பாறும்  பேய்களும்  கணங்கள் மற்றும் குழுவிய
களத்தை
- கழுகும், பருந்தும்,  பாறும் பேய்களும்   மற்றுமுள்ள
காகம் முதலிய கூட்டமும்  கூடியுள்ள  போர்க்களத்தை; கண்ணின்
நோக்கினர் 
-  கண்ணில் கண்டனர்; துணுக்கம் கொண்டார் -
மனநடுக்கம் கொண்டனர். 
 

(3)
 

9584.

ஏங்கினார்; நடுக்கமுற்றார்; இரைத்து இரைத்து,

உள்ளம் ஏற,

வீங்கினார்; வெருவலுற்றார்; விம்மினார்; உள்ளம்

வெம்ப,

ஓங்கினார்; மெள்ள மெள்ள உயிர் நிலைத்து,

உவகை ஊற,

ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து

அறையகிற்பார்?

 

ஏங்கினார்   -   அழுதார்கள்; நடுக்கமுற்றார் - நடுக்கம்
அடைந்தார்கள்; இரைத்து இரைத்து உள்ளம் ஏற வீங்கினார்-
பெருமூச்சு   வாங்கி   மனம்  துன்புற  உடம்பு  வீங்கினார்கள்;
வெருவலுற்றார்   -  அஞ்சினார்கள்;   உள்ளம்    வெம்ப
விம்மினார்
  -  மனம்   வெதும்பத்  தேம்பினார்கள்; மெள்ள
மெள்ள உயிர் நிலைத்து
- மெதுவாக உயிர்ப்பு  நிலைபெற்று;
உவளக  ஊற  -  மகிழ்ச்சி   பொங்க; ஓங்கினார் -  உணர்வு
மிகுந்தார்கள்;  ஆங்கு  அவர்   உற்ற தன்மை - அப்போது
அவர்கள்  அடைந்த    மெய்ப்பாட்டுத்  தன்மையை;  அறிந்து
அறைய கிற்பார் யார்
- தெரிந்து சொல்ல வல்லவர்கள் யார்?
(ஒருவருமில்லை);  
 

(4)