பக்கம் எண் :

228யுத்த காண்டம் 

போர்க்களக் காட்சியை வீடணன் காட்டிக் கூறுதல்
 

9585.

ஆயிரம் பருவம் கண்டால், காட்சிக்கு ஓர் கரையிற்று

அன்றால்;

மேயின துறைகள்தோறும் விம்மினார் நிற்பது 

அல்லால்,

பாய் திரைப் பரவை ஏழும் காண்குறும் பதகர் என்ன,
'நீ இருந்து உரைத்தி' என்றார்; வீடணன் நெறியின்

சொல்வான்;

 

பாய் திரைப்பரவை ஏழும்- அலைகள் பாய்ந்து வரும்
கடல்கள் ஏழையும்; காண்குறும் பதகர் என்ன- காண விரும்பும்
பாவிகளைப் போல; மேயின துறைகள் தோறும்- விரும்பிய
துறைகள்    தோறும்;   விம்மினார் - மகிழ்ந்து;   நிற்பது
அல்லால்
-  நிற்பதன்றி; ஆயிரம்   பருவம்   கண்டால்
காட்சிக்கு ஓர் கரையிற்று அன்றால்
- ஆயிரம் ஆண்டுகள்
ஆனாலும் சாட்சிக்கு ஒரு கரை காணல் இயலாது; நீ இருந்தி
உரைத்தி  என்றார்
- அமைதியாக  இருந்து   நீ   சொல்க
என்றனர்;  வீடணன்  நெறியின்  சொல்வான்  -  வீடணன்
முறையாகக் கூறுவான். 

(5)
 

சந்தக் கலித்துறை
 

9586.

'காகப் பந்தர்ச் செங் களம் எங்கும், செறி கால
ஓகத்து அம்பின் பொன்றினவேனும், உடல் ஒன்றி,
மேகச் சங்கம் தொக்கன, வீழும் வெளி இன்றி,
நாகக் குன்றின் நின்றன காண்மின் - நமரங்காள்!
 

நமரங்காள்- நம்மவர்களே!;  ஓகத்து  அம்பின்
பொன்றினவேனும்
- (இராமனின்) அம்புக் கூட்டத்தால்
இறந்தன ஆயினும்; உடல் ஒன்றி - உடல்கள் ஒன்றுடன்
ஒன்று ஒட்டி;  செறி  கால  -  இரத்தச்  சேற்றில் சிக்கிய
கால்களுடன்; மேகச் சங்கம் தொக்கன - மேகக் கூட்டம்
கூடியது போல்; வீழும் வெளி இன்றி - தரையில்   வீழ
இடமின்றி;   காகப்   பந்தர்   செங்களம்  எங்கும்-
காகங்களிட்ட பந்தரை உடைய சிவந்த போர்க்களம் எங்கும்;
நாகக் குன்றின் நின்றன காண்மின்- யானை மலைகள்
நின்றுள்ள நிலையைப் பாரீர்.
 

ஓகம் - பெருங்கூட்டம்; சங்கம் - கூட்டம்; நாகம் - யானை
 

(6)