9587. | 'வென்றிச் செங் கண் வெம்மை அரக்கர் விசை |
| ஊர்வ, |
| ஒன்றிற்கு ஒன்று உற்று அம்பு தலைப்பட்டு உயிர் |
| நுங்க, |
| பொன்றி, சிங்கம் நாக அடுக்கல் பொலிகின்ற |
| குன்றில் துஞ்சும் தன்மை நிகர்க்கும் குறி காணீர். |
|
வென்றிச் செங்கண் வெம்மை அரக்கர்- வெற்றி கொண்டு முன்னர் விளங்கிய சிவந்த கண்ணும் கொடுமையுமுடைய அரக்கர்; விசை ஊர்வ- (இராமனின் அம்புகள்) வேகமாக வந்துதைக்க; அம்பு ஒன்றிற்கு ஒன்று உற்று தலைப்பட்டு - அம்புகள் ஒன்றின் மேல் ஒன்று முற்பட வந்து பாய்ந்து; உயிர் நுங்க- தம் உயிரைப் பருகியதால்; பொன்றி - இறந்து; சிங்கம் நாக அடுக்கல் பொலிகின்ற குன்றில் துஞ்சும் தன்மை - சிங்கங்கள் யானைகளாம் குன்றின் மேல் உறங்கும் தன்மையை; நிகர்க்கும் குறி காணீர் - ஒத்து நிற்கும் குறிப்பைப் பாரீர். |
(7) |
9588. | 'அளியின் பொங்கும் அங்கணன் ஏவும் அயில் |
| வாளிக் |
| களியில் பட்டார் வாள் முகம், மின்னும் கரை |
| இல்லாப் |
| புளினத் திட்டின் கண் அகன் வாரிக் கடல் பூத்த |
| நளினக் காடே ஒப்பன காண்மின் - நமரங்காள்! |
|
அளியின் பொங்கும் அங்கணன்- அருள் ததும்பும் அழகிய கண்களையுடைய இராமன்; ஏவும் அயில்வாளிக் களியின் பட்டார் - ஏவிய கூரிய அம்புகளால் (இறக்க வாய்ப்புப் பெற்ற) களிப்போடு மடிந்த அரக்கரின்; மின்னும் கரையில்லா வாள்முகம் - மின்னுகின்ற அளவில்லா ஒளி படைத்த முகங்கள்; புளினத் திட்டின் கண் அகன் வாரிக் கடல் பூத்த - மணல் திட்டுக்களின் அகன்ற நீர் மிகுந்த கடலில் மலர்ந்த; நளினக்காடே ஒப்பன- தாமரைக் காடே போல் வன; நமரங்காள்! காண்மின்- நம்மவர்களே! பாருங்கள். |
(8) |
9589. | 'ஒழுகிப் பாயும் மும் மத வேழம் உயிரோடும் |
| எழுகிற்கில்லாச் செம்புனல் வெள்ளத்திடை இற்ற; |