செம்புள்ளிகள் கொண்ட யானைகள்; பின்னும் முன்னும் மாறின வீழ்வின் பிணையுற்ற - அம்புகளால் வீழும் போது பின்புறமும் முன்புறமுமாக மாறினவாகச் சேர்ந்துள்ளவை; தன்னின் நேரா - தன்னில்தான் ஒப்பாக; மெய் இருபாலும் தலைபெற்ற - உடம்பின் இருபக்கமும் தலையைப் பெற்ற புதியவிலங்கு; என்னும் தன்மைக்கு ஏய்வன - என்று கூறும் பண்பிற்குப் பொருந்துவன; பல்வேறு இவை காணீர் - பலவேறான இவற்றைப் பாரீர். |
(13) |
9594. | 'நாமத் திண் போர் முற்றிய கோப நகை நாறும், |
| பாமத் தொல் நீர் அன்ன நிறத்தோர் பகு வாய்கள், |
| தூமத்தோடும் வெங் கனல் இன்னும் சுடர்கின்ற |
| ஓமக் குண்டம் ஒப்பன பல் வேறு இவை காணீர். |
|
நாமத்திண்போர் முற்றிய - அச்சமூட்டும் வலிய போரில் முதிர்ந்த; கோப நகை நாறும் - சினக் கடும் சிரிப்பில் தோன்றியவும்; பாமத் தொல் நீர் அன்ன - பரவுகின்ற பழமையான நீரையுடைய கடல்போல்; நிறத்தோர் பகுவாய்கள்- நிறத்தையுடையவுமான ஒப்பில்லாத பிளவுபட்ட வாய்கள்; தூமத்தொடு வெங்கனல் இன்னும் சுடர்கின்ற - புகையுடன் கொடிய நெருப்பு இன்னும் எரிகின்ற; ஓமக்குண்டம் ஒப்பன - ஓமகுண்டங்களைப் போன்றன; பல்வேறு இவை காணீர்- பலவேறுபட்ட இவற்றைப் பாருங்கள். |
(14) |
9595. | 'மின்னும் ஓடை ஆடல் வயப் போர் மிடல் வேழக் |
| கன்னம் மூலத்து உற்றன வெண் சாமரை காணீர்; |
| மன்னும் மா நீர்த் தாமரை மானும் வதனத்த |
| அன்னம் மெல்லத் துஞ்சுவ ஒக்கின்றவை காணீர். |
|
மின்னும் ஓடை ஆடல்- மின்னுகின்ற நெற்றிப்பட்டத்தையும் ஆடலையும் உடைய; வயப்போர் மிடல் வேழக்கன்னம் மூலத்துற்றன - வெற்றி பொருந்திய போரிலே வலிமை மிக்க யானைகளின் காதின் அடிப்பக்கத்திலே அமைந்துள்ள; வெண்சாமரை காணீர் - வெண்சாமரைகளைப் பாரீர்; மன்னும் மாநீர்த் தாமரைமானும் - நிலைபெற்ற மிகுந்த நீரில் உள்ள தாமரை மலரை ஒத்த; வதனத்த - (வீரரின்) முகத்தின்மீது படிந்த அவைகள்; அன்னம் மெல்லத் துஞ்சுவ ஒக்கின்றவை காணீர் - |