பக்கம் எண் :

 வானரர் களம் காண் படலம்233

அன்னப்பறவைகள் அம்மலர்களில் மெல்லத் தூங்குகின்றவை
ஒக்கும். அவற்றைப் பாரீர். 
 

(15)
 

9596.

'ஓளிம் முற்றாது உற்று உயர் வேழத்து ஒளிர் வெண்

கோடு,

ஆளின் முற்றாச் செம் புனல் வெள்ளத்தவை காணீர்;
கோளின் முற்றாச் செக்கருள் மேகக் குழுவின்கண்
நாளின் முற்றா வெண் பிறை போலும் - நமரங்காள்!
 

நமரங்காள்- நம்மவர்களே!; ஆளின் முற்றாச் செம்புனல்
வெள்ளத்து
  -  வீரர்களால்   நிரம்பப்    பெறாத    இரத்த
வெள்ளத்தில்; ஓளிம்  முற்றாது  உற்று உயர்  வேழத்து -
ஒழுங்காக  முற்றுகை செய்யாது  போர்க்களத்தை  அடைந்த
உயர்ந்த  யானைகளின்;  ஒளிர் வெண்   கோடு  காணீர்-
ஒளிவீசுகின்ற   வெண்மையான  கொம்புகளைக்   காணுங்கள்!;
கோளின்  முற்றாச்  செக்கருள்  -  ஒளியில்   நிரம்பாச்
செக்கர் வானத்துள் கிடக்கும்; மேகக்குழுவின் கண்- மேகக்
கூட்டங்களினிடத்தே;   நாளின் முற்றாவெண்பிறை போலும்-
நாளால் நிரம்பாத வெள்ளிய பிறைமதி போல விளங்கும்; 
 

(16)
 

9597.

'கொடியும் வில்லும், கோலொடு வேலும், குவி தேரும்,
துடியின் பாதக் குன்றின்மிசைத் தோல் விசியின்

 கட்டு

ஒடியும் வெய்யோர் கண் எரி செல்ல, உடன் வெந்த
தடி உண்டு ஆடிக் கூளி தடிக்கின்றன காணீர்.
 

ஒடியும் வெய்யோர் கண் எரிசெல்ல- இறக்கும் வீரர்களின்
கண்களில்  தோன்றும்  கோபத்  தீ  செல்ல; கொடியும் வில்லும்
கோலொடு வேலும் குவி தேரும்
- கொடிகளையும் விற்களையும்
அம்புகளோடு   வேல்களையும் குவிந்த தேர்களையும்; துடியின்
பாதக்   குன்றின்மிசை
- உடுக்கைபோன்ற   அடிகளையுடைய
மலைபோன்ற யானைகளின் மேல்; விசியின் கட்டு - வாரினால்
விரிந்து கட்டிய அம்பாரிகளையும் சுட்டிக்காட்ட; உடன்வெந்த
தடியுண்டு
- அவற்றுடன் வெந்த தசையைத் தின்று; ஆடிக்கூளி
தடிக்கின்றன
- ஆடிக் கொண்டு பேய்கள் பருக்கின்றன;
காணீர்- பாருங்கள். 
 

(17)