உண்டு உண்டு' என்ன, மறுகி வந்தாள்- அகன்ற அல்குல் மட்டும் அல்லாது, சிறிது இடையும் உண்டு' எனக் கண்டோர் வியந்து கூறுமாறு (ஒல்கி நடந்து) மனம் கலங்கி வந்துற்றாள். |
துன்பம் மிகுந்ததால் தலைவிரி கோலத்துடன் மண்டோதரி வந்தனள் என்பதாம். உத்தமப் பெண்ணாகையால் காலளவு நீண்ட கற்றைக் கூந்தலையுடையவள் என்றார். |
(44) |
| 9230. | தலையின்மேல் சுமந்த கையள், தழலின்மேல் |
| மிதிக்கின்றாள்போல் |
| நிலையின்மேல் மிதிக்கும் தாளன், நேசத்தால் |
| நிறைந்த நெஞ்சள், |
| கொலையின் மேல் குறித்த வேடன் கூர்ங் கணை |
| உயிரைக் கொள்ள, |
| மலையின்மேல் மயில் வீழ்ந்தென்ன, மைந்தன்மேல் |
| மறுகி வீழ்ந்தாள். |
| |
தலையின் மேல் சுமந்த கையள் - மண்டோதரி தலையின் மேல் வைத்த கையை உடையவளாய்; தழலின் மேல் மிதிக்கின்றாள் போல்- நெருப்பின் மேல் மிதிக்கின்றவளைப் போல; நிலையின் மேல் மிதிக்கும் தாளள் - நிலையாக உள்ள தரையின் மேல் மிதிக்கின்ற (பதைபதைக்கும்) பாதங்களை உடையவளாய்; நேசத்தால் நிறைந்த நெஞ்சள் - மகன் மேல் வைத்த பேரன்பினால் துக்கத்தால் நிறைந்த நெஞ்சுடையவளாய் வந்து; கொலையின் மேல் குறித்த வேடன்- கொலைமேல் சென்ற குறிப்புடைய வேட்டுவனது; கூர்ங்கணை உயிரைக் கொள்ள- கூரிய அம்பு தன் உயிரை வாங்க, மயில் மலையின் மேல் வீழ்ந்தென்ன - ஒரு மயில் மலையின் மேல் வீழ்ந்தாற்போல; மைந்தன் மேல் மறுகி வீழ்ந்தாள் - மகனது உடம்பின் மேல் சுழன்று வீழ்ந்தாள். |
(45) |
| 9231. | உயிர்த்திலள்; உணர்வும் இல்லள்; 'உயிர் |
| இலள்கொல்லோ!' என்னப் |
| பெயர்த்திலள், யாக்கை; ஒன்றும் பேசலள்; விம்மி |
| யாதும் |
| வியர்த்திலள்; நெடிது போது விம்மலள்; மெல்ல |
| மெல்ல, |
| அயர்த்தனள் அரிதின் தேறி, வாய் திறந்து, |
| அரற்றலுற்றாள்; |