பக்கம் எண் :

240யுத்த காண்டம் 

குமுதம்   நானும் மதத்தன - குமுத மலர்களின்   மணம்
வீசுகின்ற  மத நீரை   உடையனவும்;  கூற்றன - எமன் போலக்
கொடுமையுடையனவும்;  சமுதரோடு  மடிந்தன  -  பாகரோடு
மடிந்து கிடப்பனவும்; சார் தரும் திமிரமா அன்ன செய்கைய
- முன் சார்கின்ற  கரும்பன்றி போலும் செய்கை கொண்டனவும்
ஆகிய யானைகள்;  இத்திறம் அமிர்தின் வந்தன  -  முன்னர் 
பாற்கடலில் அமுதத்தோடு பிறந்தன;ஐயிரு கோடி - பத்துக்கோடி
எனும் அளவுடையன. 
 

(28)
 

9609.

'ஏறு நான்முகன் வேள்வி எழுந்தன;
ஊறும் மாரியும், ஓங்கு அலை ஓதமும்,
மாறும் ஆயினும், மா மதமாய் வரும்
ஆறு மாறில, ஆறு-இரு கோடியால்.
 

ஊறும் மாரியும்- பெய்யும் மழையும்; ஓங்கு அலை ஓதமும்-
உயர்ந்த அலைவீசும் கடலும்;   மாறும் ஆயினும்  -  நீர் வற்றி
வறண்டு   போனாலும்;  மாமதமாய்  வரும்  -  கரிய மத நீராய்
ஒழுகின்ற; ஆறு மாறில - ஆறுகள் மாற்றமுறாதனவான யானைகள்;
ஆறு இரு கோடி- பன்னிரண்டு கோடி; ஏறுநான்முகன் வேள்வி
எழுந்தன
- பெருமையில் உயர்ந்த பிரமனின் யாகத்தின் தோன்றினவாம். 
 

(29)
 

9610.

'உயிர் வறந்தும், உதிரம் வறந்து தம்
மயர் வறந்தும், மதம் மறவாதன,
புயலவன் திசைப் போர் மத யானையின்
இயல் பரம்பரை ஏழ் - இரு கோடியால்.
 

உயிர் வறந்தும்- உயிர் நீங்கியும்; உதிரம் வறந்தும் -
இரத்தம்  வற்றியும்;  தம்மயர்   வறந்தும்  -  தம்முடைய
மதமயக்கம்  நீங்கினும்;  மதம் மறவாதன  -  மதம் மட்டும்
நீங்காதன யானைகள்; புயல்வன்- மேகங்களின் தலைவனாம்
இந்திரன்;  திசைப்  போர்  மதயானையின்  -  கிழக்குத்
திக்கில் போர்த்திறமிக்க ஐராவத யானையின்; இயல் பரம்பரை
-  இயல்புள்ள  மரபில்  தோன்றியவை;  ஏழ்  இருகோடி-
பதினான்கு கோடி அளவுடையன. 
 

9611.

'கொடாது நிற்றலின், கொற்ற நெடுந் திசை
எடாது நிற்பன, நாட்டம் இமைப்பு இல,
வடாது திக்கின் மதவரையின் வழிக்
கடாம் முகத்த, முளரிக் கணக்கவால்.