பக்கம் எண் :

 வானரர் களம் காண் படலம்241

வடாது திக்கின்  - வடதிசைக்குரிய; மதவரையின் வழி -
மதம் பொழியும் குன்றம் போன்ற சாருவ பௌமம்  என்ற யானை
மரபில் தோன்றி; கடாம் முகத்த  - மதநீர் பொழியும் முகமுள்ள
இந்த யானைகள்; கொடாது நிற்றலின்  - (பிரமன் இப்பூமியைத்
தாங்குக என) அருளாது   இருத்தலால்;  கொற்ற நெடுந்திசை 
வெற்றியுடைய  நீண்ட திக்கினை; எடாது  நிற்பன  - தாங்காமல்
நிற்பன;நாட்டம் இமைப்பு இல- தேவர்போல் கண் இமையாதன;
முளரிக் கணக்க- பதுமம் எனும் பெருந்தொகையன. 
 

(31)
 

9612.

'வானவர்க்கு இறைவன் திறை தந்தன
ஆன வர்க்கம் ஒர் ஆயிர கோடியும்,
தானவர்க்கு இறைவன் திறை தந்தன
ஏனை வர்க்கம் கணக்கு இல, இவ் எலாம்.
 

வானவர்க்கு  இறைவன்  திறைதந்தன  -   இந்திரனால்
(இராவணனுக்கு) கப்பப்பொருள்களாகத் தந்தன; ஆன வர்க்கம்
ஓர் ஆயிரகோடி 
- ஆகிய  கூட்டம்  ஓர் ஆயிரகோடியாகும்;
தானவர்க்கு   இறைவன்  -  தானவர்க்குத்  தலைவன்; திறை
தந்தன
  - கப்பமாக அளித்தவை; ஏனை  வர்க்கம் - மற்றோர்
இனமாம்; இவ்எலாம் கணக்கு இல- இவற்றிற்குக் கணக்கு
இல்லை. 
 

(32)
 

9613.

'பாற்கடல் பண்டு அமிழ்தம் பயந்த நாள்,
ஆர்த்து எழுந்தன, ஆயிரம் ஆயிரம்
மால் கணப் பரி இங்கு இவை; மாறு இவை;
மேற்கின் வேலை வருணனை வென்றவால்.
 

இங்கு இவை- இங்கே காணப்படும் இக்குதிரைகள்; பண்டு
பாற்கடல் அமிழ்தம்  பயந்த  நாள்
- முன்னர்ப்  பாற்கடல்
அமுதத்தை அளித்த நாள்; ஆர்த்து  எழுந்தன - ஆரவாரம்
செய்து எழுந்தன;   ஆயிரம் ஆயிரம்  - ஆயிரம்  ஆயிரம்
கணக்குடையன; மால்கணம்  பரி -  பெருமைமிக்க  போர்க்களக்
குதிரைகள்; மாறு இவை - இவற்றிற்கு   மாறாகத்   தோன்றும்
இவை; மேற்கின்   வேலை    வருணனை   வென்றன 
மேற்கேயுள்ள கடலில் தெய்வமாக உள்ள வருணனைவென்றவை. 
 

(33)
 

9614.

'இரு நிதிக் கிழவன் இழந்து ஏகின
அரிய அப் பரி ஆயிரம் ஆயிரம்;