பக்கம் எண் :

 இராவணன் களம் காண் படலம்245

பானம் ஊட்டி, சயனம் பரப்புவான்,
வான நாடியர் யாவரும் வந்தனர்.
 

நானம் நெய் நன்கு உரைத்து- புழுகு நெய்யை நன்கு தேய்த்து;
நறும்புனல் ஆன கோது அற ஆட்டி - நறுமண நீரால் அழுக்குப்
போக   நீராட்டி;  அமுதொடும்  பானம்   ஊட்டி  - அமுதாகிய
சோறொடு   பருகும்   நீரையும்   அளித்து;  சயனம் பரப்புவான்-
படுக்கைகளைப்   பரப்புவதற்காக; வானநாடியர் யாவரும் வந்தனர்
- வானுலகப் பெண்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். 
 

(4)
 

9621.

பாடுவார்கள்; பயில் நடம் பாவகத்து
ஆடுவார்கள்; அமளியில் இன்புறக்
கூடுவார்கள்; முதலும் குறைவு அறத்
தேடினான் என, பண்ணையின் சேர்ந்ததால்.
 

பாடுவார்கள் -  இன்னிசை   பாடுவார்களும்; பயில்  நடம்
பாவகத்து ஆடுவார்கள் - பயின்ற நாட்டியத்தை பாவனையோடு
ஆடுவார்களும்;   அமளியில்    இன்புறக்   கூடுவார்கள்  -
படுக்கையில் இன்பம் பொருந்த அணைவார்கள்; முதலும் குறைவு
அற
  - முதற்பொருள் முதல் எவையும் குறைவின்றி; தேடினான்
என
  -   தேடிக்   கொண்டவன்    போன்று;    பண்ணையின்
சேர்ந்தது
- மகளிர் கூட்டத்தால் சேர்ந்தது ஆம்.
 

தாம் புனைந்த நாடக மாந்தவராகவே ஆதி நடிப்பது பாவகம்
ஆகும்.   பாடல், ஆடல், கூடல் என்பவற்றைத் தாமாக  முயற்சி
செய்யாமல் அரக்க வீரர்கள்  இராவணன் ஆணையில் எளிதாகப்
பெற்றனர் என்பதாம். பண்ணை - மகளிர் கூட்டம். 
 

(5)
 

9622.

அரைசர் ஆதி, அடியவர் அந்தமா,
வரை செய் மேனி இராக்கதர் வந்துளார்,
விரைவின் இந்திர போகம் விழைதர,
கரை இலாத பெரு வளம் கண்ணினார்.
 

அரைசர்   ஆதி - அரசர் முதல்; அடியவர் அந்தமா -
அடியவர்கள் ஈறாக; வரைசெய் மேனி இராக்கதர் வந்துளார்-
மலை   போன்ற வலிய உடம்புள்ள அரக்கர் வீரர் வந்துள்ளனர்;
விரைவின்  இந்திரபோகம் விழைதர  - விரைவாக   இந்திர
போகத்தை விரும்பிட; கரையிலாத பெருவளம் கண்ணினார் -
அளவில்லாத இன்பப் பெருவளத்தைத் துய்த்தனர். 
  

(6)