பக்கம் எண் :

246யுத்த காண்டம் 

9623.

இன்ன தன்மை அமைந்த இராக்கதர்
மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார்,
அன்ன சேனை களப் பட்ட ஆறு எலாம்
துன்னு தூதர் செவியிடைச் சொல்லுவார்:
 

இன்ன தன்மை அமைந்த இராக்கதர் மன்னன் மாடுவந்து-
இத்தகைய   போகத்தைத் துய்க்கும்   இராக்கதர்களின் அரசனாம்
இராவணனிடத்து   வந்து;   எய்தி   வணங்கினார்- அடைந்து
தொழுதனர்; அன்ன சேனை - அத்தன்மையான மூலப்படை முழுதும்;
களப்பட்ட ஆறு எலாம் - போர்க்களத்தில் இறந்துபட்டதெல்லாம்;
துன்னு தூதர் - இராவணனை  அடைந்த   தூதுவர்; செவியிடைச்
சொல்லுவார்- செவியில் மறை பொருளாகக் கூறுவார். 
 

(7)
 

9624.

நடுங்குகின்ற உடலினர், நா உலர்ந்து
ஒடுங்குகின்ற உயிர்ப்பினர், உள் அழிந்து
இடுங்குகின்ற விழியினர், ஏங்கினார்,
பிடுங்குகின்ற உரையினர், பேசுவார்:
 

நடுங்குகின்ற உடலினர்- நடுங்கும் உடல் உடையவராய்;
நாஉலர்ந்து - நாக்கு வறந்து; ஒடுங்குகின்ற உயிர்ப்பினர்-
சோர்கின்ற   மூச்சுடையவராய்;   உள்  அழிந்து- உள்ளம்
அழிந்து; இடுங்குகின்ற விழியினர்- சுருங்கிய கண்ணினராய்;
ஏங்கினார்- ஏங்கி நின்றவராய்; பிடுங்குகின்ற மொழியினர்
பேசுவார்
- சொல் தடுமாறு சொற்களை வலிதிற் பிடுங்குபவர்
போல் கூறினர். 
 

(8)
 

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

9625.

'இன்று யார் விருந்து இங்கு உண்பார்? - இகல்

முகத்து இமையோர் தந்த

வென்றியாய்!- ஏவச் சென்ற ஆயிர வெள்ளச் 

சேனை

நின்றுளார் புறத்தது ஆக, இராமன் கை நிமிர்ந்த 

சாபம்

ஒன்றினால், இரண்டு மூன்று கடிகையின் உலந்தது'

என்றார்.