பக்கம் எண் :

 இராவணன் களம் காண் படலம்247

இகல்முகத்து   இமையோர் தந்த   வென்றியாய்- போரில்
விண்ணவர் அளித்த வெற்றி  பெற்ற அரசே!; ஏவச் சென்ற ஆயிர
வெள்ளச் சேனை
- நீ ஆணையிடப் போர்   புரியச் சென்ற ஆயிர
வெள்ளம் ஆகிய படை; புறத்தது ஆக நின்றுளார் - போர்க்களத்தில்
ஓர்புறமாக   நிற்க;   இராமன் கைநிமிர்ந்த   சாபம் ஒன்றினால்-
இராமன் திருக்கரத்திலே விளங்கும் வில் ஒன்றினால்; இரண்டு மூன்று
கடிகையின் உலர்ந்தது
- ஆறு நாழிகைப் பொழுதில் சேனை முழுதும்
அழிந்தது; இன்று யார் விருந்து இங்கு உண்பார் என்றார்-
இப்போது யாரிங்கு விருந்துண்பார்கள் என்று கேட்டனர். 
 

(9)
 

9626.

'வலிக் கடன் வான் உளோரைக் கொண்டு நீ

வகுத்த போகம்,

''கலிக் கடன் அளிப்பல்'' என்று நிருதர்க்குக்

கருதினாயேல்,

பலிக் கடன் அளிக்கற்பாலை அல்லது, உன்

குலத்தின்பாலோர்

ஒலிக் கடல் உலகத்து இல்லை; ஊர் உளார் உளரே

உள்ளார்.*

 

வலிக்கடன் வான் உளோரைக் கொண்டு - கட்டளையாக
கடமையை   செய்யும் விண்ணுளோரைக் கொண்டு; நீ வகுத்த
போகம்
- நீ உண்டாக்கிய போகத்தை; கலிக்கடன் அனிப்பல்
என்று
- மகிழ்ச்சியின்    முறைமையால்    அளிப்பேன்  என;
நிருதர்க்குக் கருதினாயேல் - அரக்கர்க்கு அளிக்க எண்ணினால்;
பலிக்கடன்   அளிக்கற்பாலை   அல்லது  -  இறந்தவர்க்குச்
செய்யும்  பலிக்கடனளிக்கத்   தக்காய்   என்பதல்லது;  உன்
குலத்தின்   பாலோர் 
-  உன்  குலத்தினைச் சேர்ந்தவர்கள்;
ஒலிக்கடல் உலகத்து இல்லை  -  ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த
உலகத்தில் யாரும்  இல்லை;  ஊர் உளார் உளரே உள்ளார் -
ஊரில்   உள்ளவர்கள்தாம் உயிருள்ளவராக   இருக்கின்றனர்
(எனத் தூதுவர் கூறினர்.) 
  

(10)
 

இராவணன் தூதர் பேச்சை ஐயுற்றுக் கூறுதல்
  

9627.

ஈட்ட அரும் உவகை ஈட்டி இருந்தவன், இசைத்த

மாற்றம்

கேட்டலும், வெகுளியோடு துணுக்கமும் இழவும் கிட்டி,