பக்கம் எண் :

248யுத்த காண்டம் 

ஊட்டு அரக்கு அனைய செங் கண் நெருப்பு உக,

உயிர்ப்பு வீங்க,

தீட்டிய படிவம் என்னத் தோன்றினன், திகைத்த

நெஞ்சன்.

 

ஈட்ட அரும் உவகை ஈட்டி இருந்தவன்- (இலக்குவனை
மாய்த்தோம்   எனப்  பிறரால்   பெறற்கரும்   மகிழ்ச்சியைப்
பெற்று இருந்த  இராவணன்; இசைத்த  மாற்றம் கேட்டலும் -
(தூதுவர்)   கூறிய   சொல்லைக்   கேட்டதும்;  வெகுளியோடு
துணுக்கமும் இழவும் கிட்டி
- கோபத்துடன் நடுக்கமும் இழப்பும்
சேர; ஊட்டு அரக்கு அனைய செங்கண்- செல்வரக்குப் போன்ற
தன்   சிவந்த    கண்கள்;   நெருப்பு   உக   -  (கோபத்தால்)
தீப்பொறி   சிந்த;   உயிர்ப்பு   வீங்க -  பெருமூச்சு உண்டாக;
திகைத்த நெஞ்சன் -  திகைப்படைந்த மனம்   கொண்டவனாய்;
தீட்டியபடிவம்  என்னத்  தோன்றினன்  -  எழுதிய  சித்திரப்
பாவை போல் அசையாமல் இருந்தான். 
 

(11)
 

9628.

'என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும்

வீயார்;

உன்னினும், உலப்பு இலாதார்; உவரியின் மணலின்

நீள்வார்;

''பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர்'' என்று 

பேசும்

இந் நிலை இதுவோ? பொய்ம்மை விளிம்பினிர்

போலும்' என்றான்.

 

என்னினும் வலியர் ஆன இராக்கதர்  -  என்னைவிட
வலிமை கொண்டவரான மூலப்படை வீரர்; யாண்டும் வீயார்-
எப்போதும் எங்கும்  அழியாதவர்கள்;  உன்னினும் உவப்பு
இலாதார் 
-  நினைப்பினால்   கொல்வதானாலும்  கொல்ல
முடியாதவர்கள்; உவரியின் மணலின்   நீள்வார்  -  கடல்
மணலைக்   காட்டிலும்  எண்ணிக்கை   மிக்கவர்; பின் ஒரு
பெயரும் இன்றி மாண்டனர்
- பின்பு  காண  ஒருவருமின்றி
இறந்தனர்; என்று பேசும்  இந்நிலை இதுவோ -  என நீர்
கூறும்   இந்நிலை   இதுவோ; பொய்ம்மை   விளிம்பினிர்
போலும் என்றான்
 - பொய்   சொன்னீர்  என்று  கூறினான் 
இராவணன்;