பக்கம் எண் :

 இராவணன் களம் காண் படலம்249

''உண்மை பேசியதாக உங்கள் நினைப்போ'' என்றான்
இராவணன். 
 

(12)
 

9629.

கேட்டு அயல் இருந்த மாலி, 'ஈது ஒரு கிழமைத்து

ஆமோ?

ஓட்டு உறு தூதர் பொய்யே உரைப்பரோ? உலகம் 

யாவும்

வீட்டுவது இமைப்பின் அன்றே, வீங்கு எரி? விரித்த

எல்லாம்

மாட்டுவன் ஒருவன் அன்றே, இறுதியில் மனத்தால்?''

என்றான்.

 

கேட்டு அயல் இருந்தமாலி- (தூதுவரை ஐயுற்று இராவணன்
கூறியதைக்)   கேட்டுப்   பக்கத்திலிருந்த   மாலியவான்; ஈது ஒரு 
கிழமைத்து ஆமோ
- (இராவணனை நோக்கி)  இவ்வாறு கேட்பது
ஒரு முறைமையுடையது ஆகுமோ?; ஓட்டு  உறு தூதர் பொய்யே
உரைப்பரோ
- நாம் விடுத்த தூதர் பொய் சொல்லுவார்களோ; உலகம்
யாவும்
- எல்லா உலகங்களும்; வீங்குஎரி வீட்டுவது இமைப்பின்
அன்றே
- ஊழித்தீ இமைப்   பொழுதில் அழிந்து விடும் அல்லவா;
விரித்த எல்லாம்  -  விரிந்து  கிடக்கும்   உலகங்கள்  எல்லாம்;
இறுதியில் மனத்தால் - ஊழியின் முடிவில் மனத்தால் நினைத்தவுடன்;
ஒருவன் மாட்டுவன் அன்றே- உருத்திரன் அழிப்பான் அல்லவா. 
 

(13)
 

9630.

' ''அளப்ப அரும் உலகம் யாவும் அமைத்துக் காத்து

அழிக்கின்றான் தன்

உளப் பெருந் தகைமைதன்னால் ஒருவன்'' என்று

உண்மை வேதம்

கிளப்பது கேட்டும் அன்றே? ''அரவின்மேல் கிடந்து,

மேல் நாள்,

முளைத்த பேர் இராமன்'' என்ற வீடணன் மொழி

பொய்த்து ஆமோ?

 

அளப்ப அரும் உலகம் யாவும்- அளந்து கூற முடியாத எல்லா
உலகமும்; அமைத்துக் காத்து அழிக்கின்றான் - படைத்து அளித்து
அழிப்பதும்; தன்உளப் பெருந்தகைமை தன்னால் ஒருவன் - தன்
உள்ளத்தின் பெருமையால் தான் ஒருவனே செய்வன; என்று