பக்கம் எண் :

 இராவணன் சோகப் படலம்25

உயிர்த்திலள், உணர்வும் இல்லள் - (அங்ஙனம் வீழ்ந்த
மண்டோதரி)   மூச்சடங்கி  உணர்வற்றவளாய்; 'உயிர் இலள்
கொல்லோ!'  என்ன   யாக்கை  பெயர்த்திலள்
-  உயிர்
நீங்கப் பெற்றாளோ என ஐயுறுமாறு உடம்பு அசையாதவளாய்;
விம்மி    யாதும்  ஒன்றும்  பேசலள்  வியர்த்திலள்-
விம்மலெடுத்து       எதைப்    பற்றியும்     பேசாதவளாய்,
வியர்வரும்பாதவளாய்; நெடிது போது அயர்த்தனள் - நீண்ட
நேரம்  அயர்ச்சியுற்றுக் கிடந்து;  மெல்ல  மெல்ல அரிதின்
தேறி விம்மலள்
- பின்பு மெல்ல மெல்ல அரிதில் தெளிந்து
தேம்பி;  வாய்   திறந்து  அரற்றலுற்றாள்-  வாய் திறந்து
அரற்றத் தொடங்கினாள்.
 

பெருந்துயர் உற்றவர்களின் மெய்ப்பாடுகள் கவிஞரால்
நுட்பமாகப்   புலப்படுத்தப்  பெறுகின்றன.  இலக்குவன்
பிரமாத்திரத்தால் வீழ்ந்து கிடந்ததைக் கண்ட இராமனின்
மெய்ப்பாடுகளாக (கம்ப. 8639) விவரிக்கப்படுபவை இங்கு
ஒப்பு நோக்கத்தக்கதாம். 
 

(46)
 

9232.

'கலையினால் திங்கள் என்ன வளர்கின்ற காலத்தே 

உன்,

சிலையினால் அரியை வெல்லக் காண்பது ஓர் தவம் 

முன் செய்தேன்;

தலை இலா ஆக்கை காண எத் தவம் செய்தேன்! 

அந்தோ!

நிலை இலா வாழ்வை இன்னும் நினைவெனோ, 

நினைவு இலாதேன்?

 

கலையினால் திங்கள் என்ன- நாளுக்கு நாள் கலையினால்
(வளர்கின்ற)   சந்திரனைப்   போல;   வளர்கின்ற  காலத்தே-
வளர்கின்ற  இளம்   பருவத்தே;   உன்  சிலையினால் அரியை
வெல்லக்
-  உன்  வில்லினால்  இந்திரனை  வெல்ல;  காண்பது
ஓர் தவம்  முன் செய்தேன்
- கண்டு  மகிழும்  தவத்தை முன்
செய்திருந்தேன்; தலை இலா ஆக்கை காண - தலையில்லாத நின்
உடம்பைக்   காண்பதற்கு;  எத்தவம்  செய்தேன்!  அந்தோ!-
எந்தத்  தவத்தை  (பாவத்தை)ச்  செய்தேன்!  அந்தோ!  நினைவு
இலாதேன்
- நல்ல நினைவு இல்லாத யான்; நிலை இலா வாழ்வை
இன்னும் நினைவேனா
- (இவ்வாறு)  நிலையில்லாத  வாழ்வினை
இனியும் மதித்திருப்பேனா?