பக்கம் எண் :

250யுத்த காண்டம் 

உண்மை வேதம்- என உண்மை கூறும் வேதம்; கிளப்பது கேட்டும்
அன்றே
- சொல்வதைக் கேட்டுள்ளோம் அல்லவா;  அரவின் மேல்
கிடந்து
- ஆதிசேடன் மேல் படுத்து; மேல் நாள் முளைத்த போர்
இராமன்
- பின்பு அயோத்தியில்   பிறந்த போராற்றல்  மிக்க இராமன்;
என்று   வீடணன்   மொழி   -  என்று கூறிய வீடணன் சொற்கள்;
பொய்த்து ஆமோ- பொய்ம்மை உடையது ஆகுமோ (ஆகாது.) 
 

(14)
 

9631.

'ஒன்று இடின் அதனை உண்ணும் உலகத்தின்

உயிர்க்கு ஒன்றாத

நின்றன எல்லாம் பெய்தால், உடன் நுங்கு நெருப்பும்

காண்டும்;

குன்றொடு மரனும், புல்லும், பல் உயிர்க் குழுவும்,

கொல்லும்

வன் திறல் காற்றும் காண்டும்; வலிக்கு ஒரு வரம்பும்

உண்டோ?

 

ஒன்று இடின் அதனை உண்ணும் - ஏற்ற ஓருணவை இட்டால்
அதனை   உண்கின்ற; உலகத்தின்   உயிர்க்கு  ஒன்றாத - உலக
உயிர்களுக்குப்   பொருந்தாத;   நின்றன  எல்லாம் பெய்தால் -
எல்லாவற்றையும்  இட்டால்;  உடன் நுங்கு நெருப்பும்  காண்டும்
-   ஒருங்கே   உண்ணும்   தீயைக்   காண்கின்றோம்;  குன்றொடு
மரனும்   புல்லும் 
-  மலையொடு    மரமும்  புல்லும்   முதலிய;
பல்லுயிர் கொல்லும் - பல   உயிர்களைக்   கொல்லும்   ஆற்றல்
உள்ள;   வன்திறல்  காற்றும் காண்டும்  -   வலிமை   கொண்ட
காற்றையும்   காண்கின்றோம்;  வலிக்கு   ஒரு வரம்பும் உண்டோ
- (ஆதலால்) வலிமைக்கு ஒரு கட்டுப்பாடு உண்டா? (இல்லை). 
 

(15)
 

9632.

'பட்டதும் உண்டே உன்னை, இந்திரச் செல்வம்;பற்று
விட்டதும் மெய்ம்மை; ஐய! மீட்டு ஒரு வினையும்

இல்லை;

கெட்டது, உன் பொருட்டினாலே, நின்னுடைக் கேளிர்

எல்லாம்;

சிட்டது செய்தி' என்றான்; அதற்கு அவன் சீற்றம்

செய்தான்.