ஐய- ஐயனே!; பட்டதும் உண்டே- மூலப்படை அழிந்தது உண்மையே; உன்னை இந்திரச் செல்வம் பற்று விட்டதும் மெய்ம்மை- உன்னை விட்டு இந்திரச் செல்வமானது பற்று விட்டு விட்டதும் உண்மையே; மீட்டு ஒரு வினையும் இல்லை - இனிச் செய்வதற்குரிய வேறு ஒரு செயலும் இல்லை; நின்னுடைக் கேளிர் எல்லாம்- உன்னுடைய உறவினர் யாவரும்; கெட்டது உன் பொருட்டினாலே - இறந்தது உன் காரணமாகவே; சிட்டது செய்தி - எனவே சிறந்ததைச் செய்வாயாக; என்றான்- என்று மாலிய வான் கூறினான்; அதற்கு அவன் சீற்றம் செய்தான்- அதைக் கேட்டு இராவணன் கோபம் கொண்டான். |
(16) |
9633. | 'இலக்குவன்தன்னை வேலால் எறிந்து, உயிர் |
| கூற்றுக்கு ஈந்தேன்; |
| அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர்; |
| அதனைக்கண்டால், |
| உலக்குமால் இராமன்; பின்னர் உயிர்ப் பொறை |
| உகவான்; உற்ற |
| மலக்கம் உண்டாகின் ஆக; வானை என் வயத்தது' |
| என்றான். |
|
இலக்குவன் தன்னை வேலால் எறிந்து- இலக்குவனை வேல் கொண்டு எறிந்து; உயிர் கூற்றுக்கு ஈந்தேன்- அவனுயிரை யமனுக்குக் கொடுத்தேன்; அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர் - வானரத் தலைவர் யாவரும் அவனிறந்த துன்பத்தில் அழுந்தி விட்டனர்; அதனைக் கண்டால்- இலக்குவன் இறந்த நிலையைப் பார்த்தால்; இராமன் உலக்கும் - இராமன் வற்றுவான்; பின்னர் உயிர்ப் பொறை உகவான் - பின்பு உயிருடன் இருப்பதை விரும்ப மாட்டாது இறப்பான்; உற்றமலக்கம் உண்டாகின் ஆக - எனக்கு நேர்ந்த துன்பம் உண்மையாயின் ஆகுக; வாகை என் வயத்தது என்றான்- வெற்றி என் பக்கமே என்று இராவணன் கூறினான். |
(17) |
9634. | ஆண்டு அது கண்டு நின்ற தூதுவர், ஐய! மெய்யே |
| மீண்டது, அவ் அளவின் ஆவி, மாருதி மருந்து |
| மெய்யில் |