| தீண்டவும்; தாழ்த்தது இல்லை; யாரும் அச் |
| செங்கணானைப் |
| பூண்டனர் தழுவிப் புக்கார்; காணுதி போதி' என்றார். |
|
ஆண்டு அது கண்டு நின்ற தூதுவர்- அங்கு அதைப் பார்த்த நின்ற தூதுவர்; ஐயா அந்த இளவல் ஆவி - ஐயனே! இராமனின் தம்பியாம் இலக்குவனின் உயிர்; மாருதி மருந்து மெய்யில் தீண்டவும் - அனுமன் கொணர்ந்த மருந்து உடம்பில் பட்டவுடன்; தாழ்ந்தது இல்லை மீண்டது- சிறிதும் தாழ்க்காமல் மீண்டது; அச்செங்கணானை யாரும் பூண்டனர் தழுவிப் புக்கார்- சிவந்த கண்ணுடைய இலக்குவனை எல்லோரும் சூழ்ந்து தழுவிக் கொண்டு சென்றனர்; காணுதி போதி என்றார்- சென்று பார்ப்பாயாக என்று கூறினர். |
(18) |
9635. | தேறிலன் ஆதலானே, மறுகுறு சிந்தை தேற, |
| ஏறினன், கனகத்து ஆரைக் கோபுரத்து உம்பர் எய்தி, |
| ஊறின சேனை வெள்ளம் உலந்த பேர் உண்மை |
| எல்லாம், |
| காறின உள்ளம் நோவ, கண்களால் தெரியக் |
| கண்டான். |
|
தேறிலன்- தூதர் சொன்னதை உண்மையென இராவணன் தெளிவு பெறவில்லை; ஆதலானே மறுகுறு சிந்தை தேற- ஆதலால் கலக்கமுற்ற எண்ணம் தெளிய; கனகத்து ஆரைக் கோபுரத்து உம்பர் ஏறினன்- பொன்னால் செய்யப் பெற்ற உயர் கோபுரத்தின் மீது ஏறினான்; எய்தி ஊறின சேனை வெள்ளம் உலந்த பேர் உண்மை எல்லாம்- அடைந்து பெருகிய சேனை வெள்ளம் அழிந்த பெரிய உண்மை முழுதும்; காறின உள்ளம் நோவ - செருக்குற்ற தன் மனம் வருந்த; கண்களால் தெரியக் கண்டான்- கண்களால் தெளிவாகப் பார்த்தான். |
(19) |
9636. | கொய் தலைப் பூசல் பட்டோர் குலத்தியர் குவளை |
| தோற்று |
| நெய்தலை வென்ற வாள் - கண் குமுதத்தின் நீர்மை |
| காட்ட, |