| கய் தலை உற்ற பூசல் கடலொடு நிமிரும்காலை, |
| செய்தலை உற்ற ஓசைச் செயலதும் செவியின் |
| கேட்டான். |
|
கொய்தலைப் பூசல் பட்டோர் குலத்தியர் - பகைவரால் கொய்யப்பட்ட (தம் கணவரின் தலையைக் கண்டு துன்புறும் அரக்க மகளிர்; குவளை தோற்று நெய்தலை வென்ற வாள்கண்- கரிய குவளை மலரையும் கரு நெய்தல் மலரையும் வென்ற வாள் போன்ற கண்கள்; குமுதத்தின் நீர்மை காட்ட - அழுது சிவந்ததால் செங்குமுத மலரின் தன்மையைக் காட்ட; கய் தலை உற்ற பூசல்- தம் கையால் தம் தலையில் அடித்துக் கொண்டிருக்கும் அழுகை ஒலி; கடலொடு நிமிருங்காலை செய்தலை உற்ற ஓசைச் செயலதும்- கடல்கள் எல்லாம் பொங்கிய காலத்து எழும் ஓசை செய்யும் தன்மையை; செவியின் கேட்டான்- இராவணன் தன் காதாற் கேட்டான். |
(20) |
9637. | எண்ணும் நீர் கடந்த யானைப் பெரும் பிணம் ஏந்தி, |
| யாணர் |
| மண்ணின் நீர் அளவும் கல்லி, நெடு மலை பறித்து, |
| மண்டும் |
| புண்ணின் நீர் ஆறும், பல் பேய்ப் புதுப் புனல் ஆடும் |
| பொம்மல், |
| கண்ணின் நீர் ஆறும், மாறாக் கருங் கடல் மடுப்பக் |
| கண்டான். |
|
எண்ணும் நீர் கடந்த யானைப் பெரும் பிணம் ஏந்தி - எண்ணும் தன்மையைக் கடந்த யானையின் பெரும் பிணங்களை ஏந்திக் கொண்டு; யாணர் மண்ணின் நீர் அளவும் கல்லி - புதிய ஊற்று நீர் உள்ள அளவும் தோண்டி; நெடுமலை பறித்து- நீண்ட மலைகளைப் புரட்டி; மண்டும் புண்ணின் நீர் அறும் - விரைந்து ஓடும் இரத்த ஆறும்; பல்பேய்ப் புதுப்புனல் ஆடும் பொம்மல்- பலபேய்கள் புதிய நீர் எனக்குளிக்கும் பொலிவுடைய; கண்ணின் நீர் ஆறும் - கண்ணில் வடியும் ஆறும்; மாறாக் கருங்கடல் மடுப்பக் கண்டான்- தம் தன்மை மாறாது கரிய கடலில் புகுந்து கலப்பதை இராவணன் பார்த்தான். |