பக்கம் எண் :

 இராவணன் களம் காண் படலம்255

9639.

விண்களில் சென்ற வன் தோள் கணவரை, அலகை

வெய்ய

புண்களில் கைகள் நீட்டி, புது நிணம் கவர்வ நோக்கி,
மண்களில் தொடர்ந்து, வானில் பிடித்து, வள்

உகிரின் மானக்

கண்களைச் சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும்

கண்டான்.*

 

விண்களில் சென்ற - (போரில் இராமன் விடுத்த அம்பால்
இறந்து)  வானுலகில்  புகுந்த; வன்தோள் கணவரை- வலிய
தோளுடைய கணவர் உடலிலுள்ள; அலகை வெய்ய புண்களில்
கைகள் நீட்டி
- பேய்கள்  இறந்தவர் உடலில் விரும்பத் தக்க
புண்களில் தம் கைகளை நீட்டி; புதுநிணம் கவர்வ நோக்கி -
புதிய கொழுப்பைக் கவர்வதைக் கண்டு; மண்களில் தொடர்ந்து
- அப்பேய்களைத் தரையில் துரத்திச் சென்று; வானில் பிடித்து - 
(பேய்கள் பறக்க)  வானத்தில் தொடர்ந்து சென்று பிடித்து; வள்
உகிரின்  -  பெரிய  நகங்களால்;  மானக் கண்களை - பெரிய
கண்களை;  சூன்று  நீக்கும்  -  தோண்டி எடுத்து நீக்குகின்ற;
அரக்கியர் குழாமும் கண்டான்  -  அரக்கியர்   கூட்டத்தையும்
பார்த்தான் இராவணன். 
 

(23)
 

9640.

விண் பிளந்து ஒல்க ஆர்க்கும் வானரர் வீக்கம்

கண்டான்;

மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம்

கண்டான்;

கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் 

கண்டான்;

புண் பிளந்தனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து

போந்தான்.

 

விண்பிளந்து ஒல்க ஆர்க்கும்- வானுலகம் பிளந்து
அசையுமாறு ஆரவாரிக்கும்; வானரர் வீக்கம் கண்டான்-
வானர வீரர்களின் பெருக்கத்தைப் பார்த்தான்; மண்பிளந்து
அழுந்த 
 -  மண்உலகம்  பிளவுற்று அழுந்துமாறு; ஆடும்
கவந்தத்தின் வருக்கம் கண்டான்
- ஆடுகின்ற தலையற்ற
உடல்களின் கூட்டத்தைப் பார்த்தான்; கண் பிளந்து அகல
நோக்கும்
- கண்களை அகலமாகத் திறந்து போர்க்களத்தைப்
பார்க்கும்; வானவர் களிப்பும் கண்டான்- தேவர்களின்
மகிழ்ச்சியையும் பார்த்தான்; புண் பிளந்தனைய