பக்கம் எண் :

 இராவணன் தேர் ஏறு படலம்259

முறைப்படி செய்து; திருமறை புகன்ற தானம்- சிறந்த வேதங்கள்
கூறும் தானங்களை; வீசினன் இயற்றி- வீசிக் கொடுத்து; மற்றும்
- மேலும்; வேட்டன வேட்டோக்கு எல்லாம்- விரும்பியவற்றை விரும்பியவர்க்கெல்லாம்; ஆசு அற நல்கி - குற்றமின்றிக் கொடுத்து;
ஒல்காப் போர்த்தொழிற்கு- தளராத போர்வினைக்கு அமைவது
ஆனான்
- பொருந்தியவன் ஆனான். 
 

(3)
 

கலித்துறை
 

9645.

அருவி அஞ்சனக் குன்றிடை ஆயிரம் அருக்கர்
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர,
கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும், சுட்டிச்
செருவில் இந்திரன் தந்த பொன் கவசமும், 

சேர்த்தான்.

 

அருவி  அஞ்சனக்  குன்றிடை  -  நீரருவி   கொண்ட கரிய
மலையிலே; ஆயிரம் அருக்கர் உருவினோடும்- ஆயிரம் சூரியர்
வேற்று உருவத்தோடு; வந்து உதித்தனர் ஆம் என ஒளிர- வந்து
தோன்றினர் ஆம் என்று ஒளி வீச; கருவிநான் முகன் வேள்வியில்
-  (உலகங்களைப்  படைக்கக்)  கருவியான  பிரமன் வேள்வியிலே;
படைத்ததும்  -  தோற்றுவித்ததும்; சுட்டிச்  செருவில் - போரில்
சுட்டிய; இந்திரன் தந்த- தேவேந்திரன் அளித்த; பொன்கவசமும்
சேர்த்தான்
- பொற்கவசமும் அணிந்தான். 
 

(4)
 

9646.

வாள் வலம் பட, மந்தரம் சூழ்ந்த மாசுணத்தின்
தாள் வலந்து ஒளிர் தமனியக் கச்சொடும் சார்த்தி;
கோள் வலந்தன குவிந்தன ஆம் எனும் கொள்கை
மீள்வு இல் கில்புரி மணிக் கடி சூத்திரம் வீக்கி;
 

வாள் வலம்பட- உடைவாளை வலமாகப் பொருந்தச் சேர்த்தி;
மந்தரம்  சூழ்ந்த மாசுணத்தின்  -  மந்தரமலையைச்  சூழ்ந்த
(வாசுகி  எனும்)  பாம்பு  போல;  தாள்  வலந்து  ஒளிர்  -
முயற்சியால்  சுற்றப்பட்டு  ஒளி  வீசும்; தமனியக்  கச்சொடும்
சார்த்தி  
-  பொன்னாலான  கச்சிலே  சேர்த்தி;   வலந்தன
கோள்  குவிந்தன
  -  வலம் வரும் கிரகங்கள் குவிந்தன; ஆம்
எனும் கொள்கை
- ஆகுமென்ற கொள்கை; மீள்வு இல் - மீளுதல்
இல்லாத; கிம்புரி -