கலை - கலை, அறிவையும் குறித்ததென்க. ''எத்தவம் செய்தேன்'' என்றவிடத்துத் ''தவம்'' என்ற சொல் எதிர்மறையாய்ப் பாவத்தைக் குறித்தது. |
(47) |
9233. | 'ஐயனே! அழகனே! என் அரும் பெறல் அமிழ்தே! |
| ஆழிக் |
| கையனே, மழுவனே, என்று இவர் வலி கடந்த கால |
| மொய்யனே!- முளரி அன்ன நின் முகம் |
| கண்டிலாதேன், |
| உய்வெனோ?- உலகம் மூன்றுக்கு ஒருவனே! செரு |
| வலோனே! |
|
ஐயனே! அழகனே! என் அரும் பெறல் அமிழ்தே- என் ஐயனே! அழகிற் சிறந்தவனே! என் பெறுதற்கரிய அமிழ்தம் போன்றவனே; ஆழிக் கையனே, மழுவனே என்று- சக்கரப் படையை ஏந்திய கையை உடைய திருமாலும், மழுப்படையை உடைய சிவனும்; என்று இவர் வலி கடந்த கால மொய்யனே! - என்று சொல்லப்படுகின்ற (முதல் தேவர்களாகிய) இவர்களின் வலிமையை வெற்றி கொண்ட எமனைப் போன்ற வலிமையை உடையவனே! உலகம் மூன்றுக்கு ஒருவனே! செருவலோனே! - உலகம் மூன்றினுக்கும் ஒருவனாய்ச் சிறந்தவனே! போரில் வல்லவனே; முளரி அன்ன நின் முகம் கண்டிலாதேன் உய்வெனோ - தாமரை மலர் போன்ற நினது முகத்தைக் கண்டிலாத யான் உயிர் வாழ்ந்திருப்பேனோ? (வாழேன்). |
ஆழி - சக்கரம், ஆழிக்கையன் - திருமால், மழுவன் - சிவன், செரு - போர். |
(48) |
9234. | 'தாள் அரிச் சதங்கை ஆர்ப்பத் தவழ்கின்ற |
| பருவம்தன்னில், |
| கோள் அரி இரண்டு பற்றிக் கொணர்ந்தனை; |
| கொணர்ந்து, கோபம் |
| மூளுறப் பொருத்தி, மாட முன்றினில் முறையின் ஓடி |
| மீள அரு விளையாட்டு இன்னம் காண்பெனோ, |
| விதியிலாதேன்! |
|
தாள் அரிச் சதங்கை ஆர்ப்பத் - (நின்) காலில் பரலோடு கூடிய சதங்கை ஆரவாரிக்க; தவழ்கின்ற பருவம் தன்னில் - |