பக்கம் எண் :

 இராவணன் தேர் ஏறு படலம்261

9649.

உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம், வான்

உலகின்

இரு நிலத்திடை, எவ் உலகத்திடை, யாரும்
புரிதரப் படும் பொலங் கழல் இலங்குறப் பூட்டி;
சரியுடைச் சுடர் சாய் நலம் சார்வுறச் சாத்தி;
 

உரும்   இடித்த   போது - இடி இடித்த போழுது; அரவுஉறு
மயக்கம்
- பாம்பு அடைந்த கலக்கம்; வான்உலகின் இருநிலத்தடை
-  விண் உலகிலும் பெரிய   பூமியிலும்; எவ்வுலகத்திடை -  எந்த
உலகத்திலும்;  யாரும்  புரிதரப்படும்  -  யாவரும்   அடையுமாறு
ஒலிக்கும்;  பொலங்கழல்  இலங்குறப் பூட்டி  -  பொற்கழல்களை
விளங்கும்  வகையில்   அணிந்து;  சரியுடைச்  சுடர் சாய்நலம் -
சரிந்த  உடையில்  சுடர்  வீழ்வதால் உண்டாகும்  அழகு; சார்வுறச்
சாத்தி
- மேலும் விளங்க அணிந்து. 
 

(8)
 

9650.

நால் - அஞ்சு ஆகிய கரங்களில் நனந் தலை

அனந்தன்

ஆலம் சார் மிடற்று அருங் கறை கிடந்தென, 

இலங்கும்

கோலம் சார் நெடுங் கோதையும் புட்டிலும் கட்டி;
தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ;
 

நால்  அஞ்சு  ஆகிய  கரங்களில்  - இருபது   கைகளில்;
நனந்தலை அனந்தன்  - பெரிய  தலையையுடைய  அனந்தனின்;
ஆலம்சார் மிடற்று அருங்கறை கிடந்தென  -  நஞ்சு  தங்கிய
கழுத்தில் அரிய கறை கிடந்தது போல; இலங்கும் - விளங்குகின்ற;
கோலம்சார்    நெடுங்கோதையும்   -    அழகுமிக்க   நீண்ட
தோற்கட்டும்;   புட்டிலும்    கட்டி  -  விரற்புட்டிலும்    கட்டி;
தாலம் சார்ந்த மாசுணம் என - நீண்ட நாவுடைய பாம்பு போல;
கங்கணம் தழுவ- கங்கணத்தை அணிந்து; 
 

(9)
 

9651.

கடல் கடைந்த மால் வரையினைச் சுற்றிய

கயிற்றின்

அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் 

இலங்க;

உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்த்த பொன் 

கதிரின்

சுடர் தயங்குற, குண்டலம் செவியிடைத் தூக்கி;