| உலகம் ஒன்றினை விளக்குறும் கதிரினை ஓட்டி, |
| அலகுஇல் எவ் உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற; |
| |
புலவிமங்கையர்- புலக்கும் பெண்டிர்; பூஞ்சிலம்பு அரற்று அடி நோக்கி- அழகிய சிலம்புகள் ஒலிக்கும் அடியை நீக்கி; தலைமை கண்ணினர் - தலைமையைக் கருதுகின்றவர்களை; தாழ்கிலா மணிமுடித்தலங்கள்- வணங்காத இரத்தினம் பதித்த திருமுடி சூட்டிய இடங்கள்; உலகம் ஒன்றினை விளக்குறும்- உலகம் ஒன்றை விளங்கச் செய்யும்; கதிரினை ஓட்டி - சூரியனைத் தனக்கீடாகாதென ஓடச் செய்து; அலகு இல் எவ் உலகத்தினும்- அளவற்ற எந்த உலகத்திலும்; வயங்கு இருள் அகற்ற- விளங்கும் இருளை நீக்கவும். |
(15) |
9657. | நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த |
| பாகம் மூன்றையும் வென்று கொண்டு, அமரர் முன்பு |
| அணிந்த |
| வாகை மாலையும் மருங்கு உற, வரி வண்டொடு |
| அளவி; |
| தோகை அன்னவர் விழி தொடர் தும்பையும் சூட்டி; |
| |
நாகம் - சுவர்க்க லோகமும்; நானிலம் - மண்ணுலகமும்; நான்முகன் நாடு என நயந்த - பிரமலோகம் என விரும்பிய; பாகம் மூன்றையும்- மூன்று பகுதிகளையும்; வென்று கொண்டு- வெற்றி பெற்றுக் கைக்கொண்டு; அமரர் முன்பு அணிந்த - தேவர் முன்னர் புனைந்திருந்த; வாகைமாலையும் - வெற்றி மாலையும்; மருங்குற- அம்மாலையின் பக்கத்தே; வரிவண்டொடு அளவி- கோடுகளை உடைய வண்டுகளொடு சேர்த்து; தோகை அன்னவர் விழிதொடர் - மயில் போன்ற இள மகளிர் கண்கள் பின்தொடரப் பெற்ற; தும்பையும் சூட்டி - தும்பை மலர் மாலையும் அணிந்து. |
(16) |
9658. | அகழும் வேலையை, காலத்தை, அளக்கர் நுண் |
| மணலை, |
| நிகழும் மீன்களை, விஞ்சையை, நினைப்பது என்? |
| நின்ற |
| இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும், இறுதிசெல்லாத |
| புகழ் என, சரம் தொலைவு இலாத் தூணி பின் பூட்டி; |