பக்கம் எண் :

 இராவணன் தேர் ஏறு படலம்265

அகழும் வேலையை- கடலை; காலத்தை - காலப் பொழுதை;
அளக்கர்  நுண்மணலை  -  கடலின் நுண்ணிய மணலை; நிகழும்
மீன்களை
  -  கடலில் வாழும் மீன்களை; விஞ்சையை - கல்வியை
ஒப்பாக;  நினைப்பது என்- நினைப்பது எதற்காக; நின்ற இகழ்வு
இல் பூதங்கள் இறப்பினும்
  -  நிலைத்து நின்ற இகழ்ச்சி இல்லாத
பூதங்கள் ஒழிந்தாலும்; இறுதி செல்லாத புகழ் என  -  அழிவற்ற
புகழைப் போல;   சரம்  தொலைவு இலாத் தூணியின்பூட்டி 
அம்புகள் என்றும் அமைந்த அம்பு அறாத் துணியைத் தன் முதுகுப்
புறத்தே கட்டி. 
 

(17)
 

9659.

'வருக, தேர்!' என, வந்தது - வையமும் வானும்
உரக தேயமும் ஒருங்கு உடன் இவரினும், உச்சிச்
சொருகு பூ அன்ன சுமையது; துரகம் இன்று 

எனினும்,

நிருதர் கோமகன் நினைந்துழிச் செல்வது, ஓர்

இமைப்பில்.

 

வையமும்  வானும்    உரகதேயமும்  -   மண்ணுளோரும்
விண்ணுளோரும் நாகலோகத்தோரும்; ஒருங்கு உடன்  இவரினும்
-  ஒருசேர   ஏறினாலும்; உச்சிச் சொருகுபூ அன்னசுமையது -
உச்சிப்   பூப்போன்ற எளிய சுமையை   உடையது; துரகம் இன்று
எனினும்
  -  குதிரைகள்   இல்லாவிடிலும்;   நிருதர்  கோமகன்
நினைத்துழி ஓர் இமைப்பில்
- இராவணன் நினைத்த போது இமை
நொடிக்கும் நேரத்தில்; செல்வது  - செல்லும் ஆற்றலுடைய தேர்;
'வருக தேர்' என வந்தது  - வருக தேர் என்று சொல்லியவுடன்
வந்தது. 
 

(18)
 

9660.

ஆயிரம் பரி அமுதொடு வந்தவும், அருக்கன்
பாய் வயப் பசுங் குதிரையின் வழியவும், படர் நீர்
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின், வன்

காற்றின்

நாயகற்கு, வந்து உதித்தவும், பூண்டது நலத்தின்.
 

அமுதொடு வந்தவும்- பாற்கடலில் அமுதத்தோடு பிறந்தனவும்;
அருக்கன் பாய்வயப் பசுங் குதிரையின் வழியவும் -  சூரியன்
குதிரைகளின்   மரபில் தோன்றியவும்; படர்நீர்   வாய் மடுக்கும்
மாவடவையின்   வயிற்றின்
  -  பரவிய  நீர் எங்கும் பரவியுள்ள
வடவாமுகாக்னி     வயிற்றிலே;      வன்காற்றின்    நாயகற்கு
வந்துதித்தவும்