பக்கம் எண் :

 இராவணன் தேர் ஏறு படலம்267

9663.

முனைவர் வானவர் முதலினர், அண்டத்து முதல்வர்

எனைவர் ஈந்தவும், இகலினில் இட்டவும், இயம்பா

வினையின் வெய்யன படைக்கலம், வேலை என்று

இசைக்கும்

சுனையின் நுண் மணல் தொகையன சுமந்தது, 

தொக்க.

 

முனைவர் வானவர்   முதலினர்   - முனிவரும், தேவரும்
முதலானவரும்; அண்டத்து முதல்வர் - உலகில் முதன்மை நிலை
பெற்றவரும்;   எனைவர்   ஈந்தவர்  -   எப்படிப்  பட்டவரும்
கொடுத்திட்டனவும்;    இகலினில்   இட்டவும்   -   போரில்
தோற்றுக்  கொடுத்திட்டனவும்; இயம்பா வினையின்  - சொல்ல
முடியாத  கொடிய  போர்ச்செயலின்; வெய்யன  படைக்கலம் -
கொடியனவாம்  படைக்கருவிகள்;  வேலை என்று இசைக்கும்
வேலை எனக் கூறப்பெறும்; சுனையின் நுண்மணல் தொகையன-
நீர்ச் சுனையிலுள்ள  மணலின்  தொகையை உடையவாகி; தொக்க
சுமந்தது
 - திரண்டவற்றைச் சுமந்தது. 
 

(22)
 

9664.

கண்ணன் நேமியும், கண்ணுதல் கணிச்சியும், 

கமலத்து

அண்ணல் குண்டிகைக் கலசமும், அழியினும், 

அழியாத்

திண்மை சான்றது; தேவரும் உணர்வு அருஞ் 

செய்கை

உண்மை ஆம் எனப் பெரியது, வென்றியின் 

உறையுள்.

 

கண்ணன்   நேமியும்  -  (அத்தேர்) திருமாலின் சக்கரமும்;
கண்ணுதல்   கணிச்சியும்  - சிவபெருமானின்   மழுப்படையும்;
கமலத்து அண்ணல்- தாமரையில் வாழும் பிரமனின்; குண்டிகைக்
கலசமும்
  -  குண்டிகையாம் பாத்திரமும்; அழியினும்  அழியாத்
திண்மை  சான்றது
  -  அழிந்தாலும்   தான்   அழியாத வலிமை
நிறைந்தது;தேவரும்- வானவரும்; உணர்வரும் செய்கை உண்மை
எனப் பெரியது
- அறிய  முடியாத தன்மை உடைய உண்மையைப்
போலப் பெரியது; வென்றியின் உறையுள்- வெற்றிக்கு உறைவிடம். 
 

(23)