பக்கம் எண் :

 இராவணன் தேர் ஏறு படலம்269

9667.

'மன்றல் அம் குழல் சனகி தன் மலர்க் கையான்

வயிறு

கொன்று, அலந்தலைக் கொடு, நெடுந் துயரிடைக்

குளித்தல்;

அன்று இது என்றிடின், மயன் மகள் அத் தொழில்

உறுதல்;

இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென், தலைப்படின்'

என்றான்.

 

மன்றல்  அம்குழல் சனகி  -   நறுமணம்  மிக்க அழகிய
கூந்தலையுடைய சீதை; தன் மலர்க்கையால் வயிறு கொன்று -
தனது மலர் போன்ற கைகளால் வயிற்றை அலைத்து; அலந்தலைக்
கொண்டு
- அலைச்சலைக் கொண்டு;நெடுந்துயரிடைக் குளித்தல்
- ஆழ்ந்த   துன்பத்தில்   மூழ்குதல்; அன்று  இது என்றிடின் -
அல்லது இது நடக்காது என்று கூறினால்;மயன்மகள் அத்தொழில்
உறுதல்  
-   மண்டோதரி   அச்செயல்களை   அடைதல் ஆம்;
தலைப்படின்  - நான்   போர்   செய்யப்   புகுந்தால்;   இன்று
இரண்டின்   ஒன்று
  - இன்றைக்கு  இந்த இரண்டு செயல்களில்
ஒன்றை; ஆக்குவென் என்றான்  - நடைபெறச் செய்வேன் என
இராவணன் கூறினான். 
 

(26)
 

9668.

பல களம் தலை மௌலியோடு இலங்கலின், பல் 

தோள்

அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு 

அலங்க,

விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப,
உலகு அளந்தவன் வளர்ந்தவன் ஆம் என

உயர்ந்தான்.

 

பலகளம் தலை மௌலியோடு இலங்கலின்- பலகழுத்துக்களின்
மீது தலைகள்  அரசு முடிகளோடு விளங்கலின்; பல்தோள் அலகு
அளந்து அறியா
- பல தோள்கள் அளவால் அளந்தறிய முடியாமல்;
நெடும்  படைகளோடு  அலங்க - நெடிய  படைக்கலன்களோடு
ஒளிர்ந்து   நிற்க;   விலகு அளம்  தருகடல்   -   விலகியுள்ள
உப்பளத்தை   அளிக்கும்   கடலால் சூழப்பட்ட; தரை விசும்பொடு
வியப்ப
- உலகத்தோர் வானோர்